ஸ்மால் கேப் எனப்படும் சிறிய மூலதன பங்குகள் , முதலீட்டாளர்களுக்கு பெருமளவு லாபத்தை அள்ளித்தருகின்றன. நாம் தேர்வு செய்யும் நிறுவனம், அந்த நிறுவனத்தின் தொழில் அமைப்பு, அது சார்ந்த துறை இவை எல்லாம் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் முதலீட்டாளர்களுக்கு லாபத்தை அள்ளித்தந்து மகிழ்ச்சியில் திளைக்க வைத்த ஒரு ஸ்மால் கேப் நிறுவனம் குறித்து பார்க்கலாம்.
டைகர் லாஜிஸ்டிக்ஸ் (Tiger Logistics) நிறுவனம் நடப்பு நிதியாண்டில் மட்டும் முதலீட்டாளர்களுக்கு 120% லாபம் தந்துள்ளது. சர்வதேச அளவில் சரக்குகளை கொண்டு சென்று சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறது டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம்.

நாடு முழுவதும் வலுவான இருப்பை கொண்டுள்ளது. வாகனம், பொறியியல், நூல்கள், ஜவுளி, மருந்து போன்றவற்றை டெலிவரி செய்யும் பணியில் 22 ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் பெற்றுள்ள நிறுவனம். கடந்த 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்டதில் இருந்து வட இந்தியாவில் சிறந்த கஸ்டம் ஹவுஸ் ஏஜெண்ட் என்ற விருதுகளை பல முறை வாங்கியுள்ளது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவு: டைகர் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் 2013ஆம் ஆண்டு மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டது. இந்த நிறுவனத்தை பொறுத்தவரை வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வலுவான ஆதரவை பெற்றுள்ளது.
கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இந்த நிறுவனத்தின் பங்கு வடிவத்தை ஆய்வு செய்தால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் 6.80 % பங்குகளை கொண்டுள்ளனர்.
முதலீட்டாளர்களுக்கு லாபம் அள்ளித்தரும் பங்கு: மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் இந்த பங்கு 2024 நிதியாண்டில் 120 % லாபத்தை தந்திருப்பதால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் இதன் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டுள்ளனர்.
கடந்த 6 மாதங்களில் டைகர் லாஜிஸ்டிக்ஸின் ஒரு பங்கின் விலை 370 ரூபாயில் இருந்து 780 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதாவது 110% உயர்வு.
கோவிட்டுக்கு பின் பெரிய லாபம்: கோவிட் பெருந்தொற்று காலத்திற்கு பின் இந்த பங்கின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது என்றே கூறலாம். அதாவது மார்ச் 2020இல் வெறும் 28 ரூபாயாக இருந்த ஒரு பங்கின் விலையானது தற்போது 780 ரூபாய் என உயர்ந்துள்ளது. இது கிட்டத்தட்ட 2,700 மடங்கு உயர்வு என்பதால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிறுவனத்தை பொறுத்த வரை டேனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட், ஃபோர்ப்ஸ் ஈஎம்எஃப், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் ஆகியவை அதிக முதலீடுகளை கொண்டுள்ளன.
மொத்த பங்குகளில் 3.16% அதாவது 3.33 லட்சம் பங்குகளை டேனோ இன்வெஸ்ட்மெண்ட் ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் வைத்துள்ளது. அதே போல ஃபோர்ப்ஸ் ஈஎம்எஃப் 1.43 லட்சம் பங்குகளையும், எலாரா இந்தியா ஆப்பர்சூனிட்டிஸ் ஃபண்ட் 1.21 லட்சம் பங்குகளையும் கொண்டுள்ளன.
More From GoodReturns

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

தங்கம் விலை தொடர் சரிவு.. ஈரான் போரில் மொத்தமாக புரட்டிப்போட்ட சம்பவம்..!!

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!



Click it and Unblock the Notifications