அமெரிக்க பெடரல் ரிசர்வ் எதிர்பார்த்த வட்டி விகிதக் குறைப்புக்கு முன்னதாகவே இன்றைய பங்குச் சந்தை சாதகமாக தொடங்கியுள்ளது. அதன்படி மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி புதிய சாதனை உச்சத்தை எட்டியது. என்டிபிசி மற்றும் டாடா ஸ்டீல் போன்ற முக்கிய பங்குகள் ஏற்றம் கண்டது. அதே நேரத்தில் எச்யூஎல் பங்குகள் சரிவை சந்தித்தன. மத்திய வங்கியின் விகிதக் குறைப்பு முடிவு மற்றும் பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்து சந்தை முதலீட்டாளர்கள் கவனித்து வருகின்றனர்.
இதற்கிடையில், இன்றைய வாரத்தின் முதல் நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புதிய சாதனைகளை எட்டியது. சென்செக்ஸ் 250 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 83,184.34 என்ற புதிய உச்சத்தை எட்டியது. அதே நேரத்தில் நிஃப்டி 25,446 என்ற புதிய உச்சத்தை எட்டியது. கூடுதலாக, நிஃப்டி மிட்கேப் 100 எல்லா நேரத்திலும் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டது.

ப்ளூசிப் பங்குகளான, என்டிபிசி, டாடா ஸ்டீல், ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் சுமார் 1% உயர்ந்து, எச்யூஎல் பங்குகள் 2% சரிந்தது. துறைசார் குறியீடுகளை பொருத்தவரை, எஃப்எம்சிஜி மட்டும் 0.76% குறைந்து, நிஃப்டி மெட்டல் 1% அதிகமாக இருந்தது. பிஎஸ்யூ வங்கி பங்குகளிலும் வாங்குதல் அதிகம் காணப்பட்டது. மகாராஷ்டிரா மாநில டிஸ்காம் 6600 மெகாவாட் ஹைபிரிட் சோலார் மற்றும் அனல் மின்சாரம் வழங்குவதற்கான கடிதத்தை வழங்கிய பிறகு அதானி பவர் மற்றும் அதானி கிரீன் பங்குகள் தலா 4% அதிகரித்தன.
உலகளாவிய சந்தைகள்:சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் இந்தோனேசியாவில் விடுமுறை விடப்பட்டுள்ளது. ஜப்பானுக்கு வெளியே ஆசிய-பசிபிக் பங்குகளின் MSCI இன் ஒட்டுமொத்த குறியீட்டு எண் கடந்த வாரம் 0.8% உயர்ந்த பிறகு கிட்டத்தட்ட சமமாக இருந்தது.
கரன்சி அப்டேட்:ஆரம்ப வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 4 காசுகள் உயர்ந்து 83.88 ஆக இருந்தது. டாலர் குறியீடு 0.1% குறைந்து 101 ஆக இருந்தது.
கச்சா தாக்கம்:இந்த வாரம் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்தது. இருப்பினும் சீனாவின் பலவீனமான தரவு மற்றும் தொடர்ச்சியான தேவைகளால் லாபங்கள் குறைக்கப்பட்டன. ப்ரெண்ட் கச்சா எண்ணெய் 72 பேரல் விலையில் வர்த்தகம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், காலை 11.54 மணியளவில் சென்செக்ஸ் 37 புள்ளிகள் அதிகரித்து 82,938 புள்ளிகளாகவும், நிஃப்டி 20 புள்ளிகள் அதிகரித்து 25,377 புள்ளிகளாகவும் வர்த்தமாகி வருகின்றன.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

டிரம்ப் கொடுத்த ஸ்பீச்: ரத்தக்களரியான பங்குச் சந்தை? சென்செக்ஸ் 1500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications