மும்பை: இந்தியாவில் ஏற்றுமதி துறையில் செயல்பட்டு வரக்கூடிய நிறுவனங்கள் கணிசமான வளர்ச்சியை கண்டு வருகின்றன. அந்த வகையில் ஏற்றுமதி துறையை சேர்ந்த ஒரு நிறுவனத்தின் பங்கு இரண்டே ஆண்டுகளில் 800 சதவீத லாபத்தை பெற்று தந்துள்ளது. இந்த ஸ்மால் கேப் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.
எஸ்பிசி எக்ஸ்போர்ட் லிமிடெட்( SBC Exports Ltd) நிறுவனம் 1991 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. காசியாபாத் மற்றும் மிர்சாபூர் பகுதிகளில் உற்பத்தி ஆலைகளை வைத்து நூல் மற்றும் ஆடைகளை தயார் செய்து விற்பனை செய்து வருகிறது. மேலும் இந்த நிறுவனம் அனைத்து வயதினருக்குமான ஆடைகளை எஸ்பிசி டிசைன் பிளஸ் என்ற பிராண்டின் கீழ் விற்பனை செய்து வருகிறது.

எஸ்பிசி எக்ஸ்போர்ட் நிறுவனத்தை பொருத்தவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மே மாதம் இதன் ஒரு பங்கு மதிப்பு ரூ.3 என்ற அளவில் இருந்தது. தற்போது 810 சதவீதம் இது அதிகரித்து ரூ.31.75 என உயர்ந்துள்ளது. எஸ்பிசி எக்ஸ்போர்ட் நிறுவன பங்கின் 52 வார கால குறைந்தபட்ச மதிப்பு ரூ.12 ஆகும். படிப்படியாக உயர்ந்து ரூ.31.75 என அதிகரித்துள்ளது .
2024 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை இந்த ஐந்து மாத காலத்தில் மட்டும் ஒரு பங்கின் மதிப்பு 60 % உயர்ந்துள்ளது . அண்மையில் இந்த நிறுவனம் தங்களின் அடுத்த ஐந்து ஆண்டு கால திட்டத்தினை வெளியிட்டது. தங்கள் நிறுவன ஆலைகளை விரிவாக்கம் செய்வது மற்றும் ரீடெய்ல் கடைகளை நிறுவுவது ,ஏற்றுமதியை அதிகரிப்பது போன்றவற்றில் கவனம் செலுத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
நகரப் பகுதிகளில் 50 கடைகளை தொடங்குவது என்றும் இரண்டாவது மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் 30 சில்லறை விற்பனை கடைகளை தொடங்குவது என்றும் எஸ்பிசி நிறுவனம் விரிவான திட்டத்தை வெளியிட்டுள்ளது. நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 128 %, கடந்த ஒரு மாத காலத்தில் 17 % உயர்ந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் சந்தை மூலதனம் ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். நிறுவன பங்கின் புக் வேல்யூ 1.40 ,பேஸ் வேல்யூ 1 ஆகும். நிறுவனத்தின் வருமானம் என பார்க்கும் போது 2023 ஆம் ஆண்டில் இந்த நிறுவனம் 225 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது .
இதன் லாபம் 2023 ஆம் ஆண்டில் 7 கோடி ரூபாயாக இருக்கிறது. நிறுவன பங்குகளில் 64% புரொமோட்டர்களிடம் இருக்கிறது, சில்லறை முதலீட்டாளர்கள் 35 % பங்குகளை கொண்டுள்ளனர்.
Story Written by: Devika
More From GoodReturns

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

கழுதை மேச்சா ரூ.50 லட்சம்!! அதுவும் அரசாங்கமே தருது!! வேற என்ன வேணும்? ஆரம்பிக்கலாமா?

பெண்களே இந்த மகளிர் தினத்துல இருந்து இதையெல்லாம் செஞ்சீங்கனா உங்க எதிர்காலம் வளமா இருக்கும்!!

பெண்களே உங்களோட மியூச்சுவல் ஃபண்டு முதலீடு எப்படி இருக்க வேண்டும்? நிபுணர்கள் வழங்கும் டிப்ஸ்

EPF முதல் SSY வரை: உங்கள் பணத்திற்கு அதிக லாபம் தரும் சிறந்த முதலீடு எது?

வெறும் ரூ.200 போதும்! உங்கள் மகளின் எதிர்காலத்திற்கு ரூ.40 லட்சம் சேமிக்கலாம் - எப்படி தெரியுமா?

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

ஒரே இடத்தில் முதலீடு செய்யாதீங்க! தற்போதைய சூழலில் ரூ.25,000-ஐ எப்படி, எங்கு செய்வது?

உங்கள் எதிர்காலம் உங்கள் கையில்! பெண்களுக்கான சிறந்த முதலீட்டு திட்டங்கள் இதோ!

ஏறிய வேகத்தில் இறங்கிய இந்திய பங்குச்சந்தை!! முதலீட்டாளர்கள் கதறல்!! இதுக்கு விடிவுகாலமே இல்லையா?:

பங்குச்சந்தை ஏற்றத்தாழ்வு: முதலீட்டாளர்களுக்கு ஆபத்தா,அதிர்ஷ்டமா? SIP-யோடு லம்ப்சம் செய்யலாமா?



Click it and Unblock the Notifications