இளம் முதலீட்டாளர்களே! நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் என்றால் என்ன தெரியுமா? இவ்ளோ சிம்பிளா..!

சென்னை: பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் ஆகிய பெயர்கள் மிகவும் பரிச்சயமான ஒன்றே. ஆனால், இவை இரண்டும் என்ன என்பதும், இவற்றின் வேறுபாடுகள் என்ன என்பதும் பலருக்குத் தெரிவதில்லை. அதுவும் முதன் முதலாக பங்குச் சந்தைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்பவராக இருந்தால், இந்த பெயர்களுக்கு அர்த்தம் தெரியாமல் குழம்பி விடுவார்கள். இந்தக் கட்டுரையில், நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பற்றியும், அவை பங்குச் சந்தையைக் கண்காணிப்பதில் வகிக்கும் பங்களிப்பை பற்றியும் காண்போம்.

நமது இந்தியாவில் இரண்டு பெரிய பங்கு சந்தை நிறுவனங்கள் உள்ளன. ஒன்று NSE (National stock exchange) மற்றொன்று BSE (Bombay stock exchange). இந்த இரு நிறுவனங்களின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் கணிப்பதற்கு நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் எனும் இன்டெக்ஸ் பயன்படுகிறது. BSE யின் இன்டெக்ஸ் சென்செக்ஸ் ,NSE யின் இன்டெக்ஸ் நிஃப்டி. மும்பை பங்குச்சந்தையின் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில் இருந்து வெவ்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு முதல் 30 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் தான் சென்செக்ஸ் என்று அழைக்கப்படுகிறது. அதேபோல தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள வெவ்வேறு நிறுவனங்களின் முதல் 50 நிறுவனங்களின் பங்குகளுக்கான இன்டெக்ஸ் தான் நிஃப்டி என்று அழைக்கப்படுகிறது.

 இளம் முதலீட்டாளர்களே! நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் என்றால் என்ன தெரியுமா? இவ்ளோ சிம்பிளா..!

BSE மற்றும் NSE: தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் மும்பை பங்குச்சந்தை (BSE) ஆகிய இரண்டும் இந்தியாவின் பெரிய பங்குச் சந்தைகள் ஆகும். BSE ஆசியாவில் உள்ள பழைய பங்குச்சந்தை எனும் சிறப்பை பெற்றுள்ளது. BSE யில் சுமார் 6000 க்கு மேற்பட்ட இந்திய கம்பெனிகளும், NSE யில் சுமார் 2200 க்கு மேற்பட்ட இந்திய கம்பெனிகளும் உள்ளன. இந்த பங்கு சந்தைகளின் பட்டியல்களில் உள்ள பெரிய கம்பெனிகளின் ஏற்ற இறக்கத்தை பொறுத்துத்தான் நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இன் ஏற்ற இறக்கம் இருக்கும். உதாரணத்திற்கு, NSE யில் உள்ள கம்பெனிகளின் மதிப்பு சரிந்தால் நிஃப்டியும் சரியும். நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் பங்குச் சந்தைகளின் நிலையைக் குறிக்க உதவும் குறியீடுகள்.

நிஃப்டி-இன் கீழ் உள்ள நிறுவனங்கள் வெவ்வேறு துறைகளை சேர்ந்தவை. சான்றாக இரும்பு, சிமெண்ட், தொழில்நுட்பம், வாகன உற்பத்தி, பெட்ரோலியம், மருந்து தயாரிப்பு உள்பட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த நிறுவனம் நிஃப்டியில் உள்ளன.

மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தை ஆகிய இரண்டும் மும்பையில் அமைந்துள்ளது. மும்பை பங்குச்சந்தை 1875-இல் தொடங்கப்பட்டது. தேசிய பங்குச் சந்தை 1992-இல் தொடங்கப்பட்டது. நிஃப்டி 50 குறியீடு 22 ஏப்ரல் 1996 அன்று தொடங்கப்பட்டது.

நிஃப்டி மற்றும் சென்செக்ஸ் இரண்டும் பங்குச் சந்தையின் போக்குகளைக் காட்டும் முக்கியமான குறியீடுகள். சென்செக்ஸ் பாரம்பரிய நிறுவனங்களின் செயல்பாட்டைக் காட்டுகிறது, நிஃப்டி முன்னணி நிறுவனங்களின் செயல்பாட்டைக் காட்டுகிறது. இந்த இரு குறியீடுகளையும் கவனிப்பதன் மூலம், பங்குச் சந்தையின் நிலவரத்தைப் பற்றிய தோராயமான யோசனை பெற முடியும். ஆனால், முதலீடு செய்வதற்கு முன் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+