அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு முதலீட்டு நிறுவனமான பிளாக்ராக் இந்தியாவில் இரண்டு நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது. பிளாக்ராக் நிறுவனம் தன்னுடைய துணை நிறுவனமான ஐஷேர்ஸ் டூ பப்ளிக் லிமிடெட் மூலம் 207 கோடி ரூபாய் மதிப்புக்கு பங்குகளை வாங்கியுள்ளது. ஐஷேர்ஸ் (iShares II Public Ltd) என்பது பிளாக் ராக் நிர்வகித்து வரும் பரிமாற்ற வர்த்தக நிதிகளின் தொகுப்பாகும்.
பிளாக்ராக் என்பது ஒரு அமெரிக்க பன்னாட்டு முதலீட்டு நிறுவனம். இது 10 டிரில்லியன் டாலர்கள் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு 38 நாடுகளில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்தியாவில் மியூச்சவல் பண்ட் மற்றும் ஸ்டாக் ப்ரோகிங் சேவைகளை துவங்க முகேஷ் அம்பானியின் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் பிளாக்ராக் இணைந்து "ஜியோ பிளாக்ராக்" என்ற நிறுவனத்தைத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் அம்பானியின் கூட்டாளியாக பிளாக்ராக் பார்க்கப்படுகிறது.
இந்நிறுவனம் ஒரு நிறுவனத்தின் பங்குகளை , வாங்குவது அல்லது விற்பது என்பது முதலீட்டாளர்களால் உற்றுநோக்கப்படுகிறது. அந்த வகையில் இந்தியாவின் இரண்டு நிறுவன பங்குகளை ஓபன் மார்க்கெட் டிரான்ஸாக்சன் முறையில் வாங்கியுள்ளது.
தேசிய பங்குச்சந்தையில் இடம்பெற்றிருக்கும் தகவல்களின் படி, ஐஷேர்ஸ் குளோபல் வாட்டர் யுசிஐடிஎஸ் நிதி, எலக்ட்ரோஸ்டீல் கேஸ்டிங்ஸ் (Electrosteel Castings) நிறுவனத்தில் 32.28 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. ஒரு பங்கின் மதிப்பு 196.21 ரூபாய் என்ற வகையில் மொத்தம் 63.35 கோடிக்கு பங்கு வர்த்தகம் நடந்துள்ளது.
அதே போல ஐஷேர்ஸ் குளோபல் கிளீன் எனர்ஜி நிதி , பிடிசி இந்தியா (PTC India) லிமிடெட் மூலம் 27.50 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. ஐஷேர்ஸ் குளோபல் கிளீன் எனர்ஜி யுசிஐடிஎஸ் நிதி மூலம் 38.67 லட்சம் பங்குகளை வாங்கியுள்ளது. மொத்தமாக பிடிசி இந்தியா லிமிடெட்டில் ஒரு பங்கின் மதிப்பு 217.53 ரூபாய் என்ற வகையில் 143.95 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
இந்த இரண்டு பங்கு வர்த்தகத்தின் மொத்த மதிப்பு 207.30 கோடி ரூபாய் ஆகும்.பிளாக்ராக் நிறுவனம் பல்க்காக பங்குகளை வாங்கியதை அடுத்து இந்த இரண்டு நிறுவனங்களின் பங்கு மதிப்புகள் ஏப்ரல் 19 பங்குச்சந்தையில் உயர்வு கண்டன. பிடிசி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 234.05 ரூபாய் என 11.29% உயர்ந்தது. அதே போல எலக்ட்ரோஸ்டீல் கேஸ்டிங் நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 196.80 ரூபாய் என 4.46% உயர்ந்தது.
அதே போல மும்பை பங்குச்சந்தையிலும் ஜிஎம்ஆர் பவர் அண்ட் அர்பன் இன்ஃபிரா நிறுவனத்தின் பங்குகள் ஓபன் மார்க்கெட் டிரான்ஸாக்சன் முறையில் 45 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது. வின்ரோ கமர்ஷியல் இந்தியா 39.92 லட்சம் பங்குகளையும், சிங்குலாரிட்டி ஹோல்டிங்ஸ் நிறுவனம் 40 லட்சம் பங்குகளையும் வாங்கி குவித்துள்ளன. ஒரு பங்கின் மதிப்பு 57.30 ரூபாய் என்ற அளவில் மொத்தம் 45.80 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்துள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!



Click it and Unblock the Notifications