நொறுங்கிய அமெரிக்க பங்குச் சந்தைகள்.. ஆட்டம் கண்ட இந்திய பங்குச் சந்தைகள்..

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தார். மேலும், அமெரிக்க பொருட்கள் அதிகம் வரி விதிக்கும் நாடுகளுக்கும் அதேபோல் பரஸ்பரி விதிக்கப்போவதாக அதிரடியாக அறிவித்தார். இதனால் சர்வதேச அளவில் வர்த்தக போர் ஏற்படும் என்ற அச்சம் எழுந்தது. அதேசமயம் டிரம்பின் வரி விதிப்பு கொள்கையால் கடந்த மாதம் அந்நாட்டு பங்குச் சந்தைகள் எழுச்சி கண்டன. குறிப்பாக எஸ்&பி 500 இன்டெக்ஸில் இடம் பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு புதிய உச்சத்தை எட்டியது. அமெரிக்காவில் உள்ள பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள 500 பெரிய நிறுவனங்களின் செயல்திறனை கண்காணிக்கும் ஒரு பங்குச் சந்தை குறியீடு எஸ்&பி 500 (S&P 500).

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. எந்த டிரம்பின் கொள்கையால் அந்நாட்டு பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டதோ அதே கொள்கை தற்போது அந்நாட்டு பங்குச் சந்தைகளின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பொருளாதார மந்தநிலை குறித்த பயத்துடன், டொனால்ட் டிரம்பின் வரி கொள்கை முதலீட்டாளர்களை பயமுறுத்தியுள்ளது. இதனால் காரணமாக, நேற்று அந்நாட்டு பங்குச் சந்தைகள் கடுமையாக அடி வாங்கின. குறிப்பாக எஸ்&பி 500 இன்டெக்ஸில் உள்ள நிறுவனங்களில் 4 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை முதலீட்டாளர்கள் விற்பனை செய்தனர்.

நொறுங்கிய அமெரிக்க பங்குச் சந்தைகள்.. ஆட்டம் கண்ட  இந்திய பங்குச் சந்தைகள்..

நேற்று எஸ்&பி 500 இன்டெக்ஸ் 2.7 சதவீதம் சரிந்தது. இது இந்த ஆண்டின் இதுவரையிலான காலத்தில் மிகப்பெரிய தினசரி சரிவாகும். நாஸ்டாக் காம்போசிட் 4 சதவீதம் சரிந்தது. வெல்த் என்ஹான்ஸ்மென்ட்டின் மூத்த முதலீட்டு மூலோபாய நிபுணர் அயாகோ யோஷிகா கூறுகையில், நாங்கள் ஒரு பெரிய மனநிலை மாற்றத்தை தெளிவாக கண்டிருக்கிறோம். பயனளித்த பல விஷயங்கள் இப்போது வேலை செய்யவில்லை என்று தெரிவித்தார்.

அமெரிக்க பங்குச் சந்தையில் ஏற்பட்ட பெரிய சரிவின் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5 மாதங்களாக தொடர் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் இந்த மாதத்தில் முதல் வாரத்தில்தான் ஏற்றம் கண்டது. இது முதலீட்டாளர்களுக்கு, சந்தை இனி சரிவிலிருந்து மீண்டு விடும் என்ற பெரும் நம்பிக்கையை கொடுத்தது. இந்த சூழ்நிலையில், அமெரிக்க பங்குச் சந்தைகள் நேற்று கடும் சரிவை சந்தித்து இருப்பது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலையில் வர்த்தகம் சரிவுடன் தொடங்கியது. குறிப்பாக சென்செக்ஸ் சுமார் 400 புள்ளிகள் குறைந்தது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+