வேதாந்தா பங்குதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. 5வது இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பு..!

வேதாந்தா குழுமம் தனது பங்குதாரர்களுக்கு இந்த ஆண்டிற்கான 5 ஆவது டிவிடெண்ட் தொகை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது - டிவிடெண்ட் தொகை மற்றும் தேதி உள்ளிட்ட விவரங்களை முழுமையாக தெரிந்துக்கொள்ளுங்கள்.

 5 ஆவது டிவிடெண்ட்!

5 ஆவது டிவிடெண்ட்!

வேதாந்தா குழுமம் (Vedanta Group) தனது பங்குதாரர்களுக்கு 5 ஆவது இடைக்கால டிவிடெண்ட் தொகை பற்றிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி, 2022-23ஆம் நிதியாண்டுக்கு ஒவ்வொரு பங்குக்கும் 20.50 ரூபாய் டிவிடெண்ட் வழங்குவதற்கு வேதாந்தா குழுமம் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

 டிவிடெண்ட் Record Date!

டிவிடெண்ட் Record Date!

டிவிடெண்ட் வழங்குவதற்கான Record date வருகின்ற ஏப்ரல் மாதம் 7 தேதியாக நிர்ணயித்துள்ளது. அதாவது, ஏப்ரல் 7 ஆம் தேதி நிலவரப்படி வேதாந்தா பங்குகளை வைத்திருப்பவர்களுக்கு இடைக்கால டிவிடெண்ட் தொகையாக 20.50 ரூபாய் வழங்கப்படும்.

 முக மதிப்பு (Face Value)

முக மதிப்பு (Face Value)

இதுகுறித்து வேதாந்தா குழுமம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில், ஏப்ரல் 7 ஆம் தேதி மூன்றாவது இடைக்கால டிவிடெண்ட் தொகையாக ஒவ்வொரு பங்குக்கும் 20.50 ரூபாய், அதாவது Face value 1 ரூபாயில் 2050 சதவீதம் ஈவுத்தொகை வழங்குவதற்கு நிர்வாகக் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக தெரிவித்துள்ளது.

 ரூ.7,261 கோடி டிவிடெண்ட்!

ரூ.7,261 கோடி டிவிடெண்ட்!

அதன்படி, வேதாந்தா குழுமம் 5 ஆவது இடைக்கால டிவிடெண்ட் தொகைக்காக சுமார் ரூ.7,261 கோடி ரூபாயை வெளியிடுகிறது. மேலும் சட்டத்தின் அடிப்படையில் குறிப்பிடப்பட்ட காலத்திற்குள் இடைக்கால டிவிடெண்ட் தொகை செலுத்தப்படும் என வேதாந்தா குழுமம் தெரிவித்துள்ளது.

 வேதாந்தாவின் டிவிடெண்ட் அறிவிப்புகள்!

வேதாந்தாவின் டிவிடெண்ட் அறிவிப்புகள்!

வேதாந்தா நிறுவனம் நிதியாண்டு 2022-23 இல் முதல் டிவிடெண்ட் தொகையை ஏப்ரல் 2022 இல் ரூ.31.50 ஆக அறிவித்தது. அதற்காக ரூ.11,710 கோடியை வெளியீடு செய்தது.

அதனையடுத்து ஜூலை 2022 இல் இரண்டாவது டிவிடெண்ட் அறிவிப்பை வெளியிட்டது. அதில் 2 ஆவது டிவிடெண்ட் அறிவிப்பில் பங்குதாரர்களுக்கு ஒரு பங்கிற்கு ரூ.19.50 ஆக டிவிடெண்டை அறிவித்தது. அதற்கு ரூ.7,250 கோடி ஒதுக்கப்பட்டது.

மூன்றாவது டிவிடெண்ட் தொகை குறித்த அறிவிப்பை சென்ற ஆண்டு நவம்பர் 2022 இல் வெளியிட்டது. அதில் ஒரு பங்கிற்கு ரூ.17.50 டிவிடெண்ட் வழங்கப்படும் என அறிவித்தது. டிவிடெண்ட் தொகைக்காக சுமார் 6505 கோடி ரூபாயை நிறுவனம் வெளியிட்டது.

அதனையடுத்து ஜனவரி 2023 இல் நான்காவது இடைக்கால டிவிடெண்ட் தொகையாக அதன் பங்குதாரர்களுக்கு ரூ.12.50 செலுத்தியது. அதற்கு ரூ.4,647 கோடி ஒதுக்கப்பட்டது.

 

 இன்று வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை!

இன்று வேதாந்தா நிறுவனத்தின் பங்கு விலை!

வேதாந்தா நிறுவனத்தின் 5 ஆவது இடைக்கால டிவிடெண்ட் அறிவிப்பை தொடர்ந்து செவ்வாய்க்கிழமை இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை 1.01% உயர்ந்து ரூ.275.50 ஆக உள்ளது.

புதன்கிழமை வர்த்தகத்தில் 0.66 சதவீத உயர்வுடன் 276.00 ரூபாயாக உள்ளது.

 

 முக்கிய அறிவிப்பு!

முக்கிய அறிவிப்பு!

வேதாந்தா நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் உள்ள அஜய் கோயல், தலைமை நிதி அதிகாரி (CFO) மற்றும் முக்கிய மேலாளர் பணியாளர் (KMP) பதவிகளிலிருந்து விலகியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது. விரைவில் நிறுவனத்தின் வாரிசு குறித்து அறிவிப்புகளும் வெளியாகும் என அறிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+