இந்திய பங்கு சந்தையானது இன்று மிகப்பெரிய வீழ்ச்சியினை கண்டு முடிவடைந்துள்ளது. இன்று பெரும்பாலான குறியீடுகள் அனைத்துமே சரிவினை கண்டு முடிவடைந்துள்ளன.
சென்செக்ஸ் உச்சத்துடன் ஒப்பிட்டு பார்க்கும்போது 1000 புள்ளிகளுக்கு மேலாக சரிவடைந்திருந்தாலும், முடிவில் சென்செக்ஸ் 874.16 அல்லது 1.45% சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.
இதே நிஃப்டி 1.61% அல்லது 287.6 புள்ளிகள் குறைந்து, 17,604 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய சந்தையானது வார இறுதி நாளான இன்றும் சரிவிலேயே முடிவடைந்துள்ளது. இதற்கு புராபிட் புக்கிங்கும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இன்டெக்ஸ் நிலவரம்
பி.எஸ்.இ ஆயில் & கேஸ் குறியீடானது கிட்டதட்ட 6% சரிவில் முடிவடைந்துள்ளது. இதே பேங்க் நிஃப்டி 3% மேலாக சரிவில் காணப்பட்டது. இதே நிஃப்டி 50, பி.எஸ்.இ சென்செக்ஸ், நிஃப்டி ஐடி, பி.எஸ்.இ ஸ்மால் கேப், பி.எஸ்.இ மிட் கேப், பி.எஸ்.இ கேப்பிட்டல் கூட்ஸ், பி.எஸ்.இ மெட்டல்ஸ், பி.எஸ்.இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% சரிவிலும், இதே நிஃப்டி பி.எஸ்.இ, பி.எஸ்.இ கன்சியூமர் டியூரபிள்ஸ் உள்ளிட்ட குறியீடுகள் 2% மேலாகவும் சரிவில் காணப்படுகின்றன. மற்ற அனைத்து குறியீடுகளும் பெரியளவில் மாற்றமின்றி காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
நிஃப்டி குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், பஜாஜ் ஆட்டோ, டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐடிசி, டிவிஸ் லேப் உள்ளிட்ட பங்குகள் ஏற்றத்திலும், அதானி எண்டர்பிரைசஸ், அதானி போர்ட்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட வங்கிகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா மோட்டார்ஸ், ஐடிசி, எம் &எம், அல்ட் ராக்டெக் சிமெண்ட், என்.டி.பி.சி உள்ளிட்ட குறியீடுகள் ஏற்றத்திலும், இதே அதானி எண்டர்பிரைசஸ், அதானிபோர்ட்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி, இந்தஸ்இந்த் வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிவிலும் காணப்படுகின்றன.
அதானி குழும பங்குகள் மோசமான சரிவு
பட்ஜெட்டிற்கு முன்பே சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த அழுத்தமான இனி வரவிருக்கும் நாட்களில் தொடரலாமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில் அதானி குழுமத்தின் 7 நிறுவன பங்குகள் இரண்டாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டுள்ளன. இதன் காரணம் அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பானது 2.83 லட்சம் கோடி ரூபாயக்கு மேலாக சரிவினைக் கண்டுள்ளது.
ரூ.12 லட்சம் கோடி இழப்பு
தொடர்ந்து கடந்த இரண்டு அமர்வுகளாகவே தொடர்ந்து ஏற்பட்டுள்ள இந்த சரிவால், முதலீட்டாளர்களுக்கும் பெருத்த இழப்பு ஏற்பட்டுள்ளது எனலாம். கடந்த இரண்டு அமர்வுகளில் மட்டும் 11.75 லட்சம் கோடி ரூபாய் சரிவு ஏற்பட்டுள்ளது எனலாம். இது சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள அழுத்தம், பட்ஜெட் 2023 எதிர்பார்ப்புகள், பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவு என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக முதலீட்டாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.
இனி எப்படியிருக்கும்?
தொடர்ந்து சர்வதேச சந்தையில் நிலவி வரும் அழுத்தம், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், பொருளாதார வளர்ச்சியில் ஏற்படும் சரிவு, முக்கிய பொருளாதாரம் குறித்த தரவுகள் என பலவும் சந்தையில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன. இனி வரவிருக்கும் அமர்வுகளிலும் ஏற்ற இறக்கம் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.