நாட்டின் பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவின் உரிமையாளர் எட்டர்னல் நிறுவனம். சோமேட்டாவின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த ராகேஷ் ரஞ்சன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் இடையே எட்டர்னல் நிறுவன பங்கின் விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.75 சதவீதம் குறைந்து ரூ.235ஆக சரிந்தது.
எட்டர்னல் நிறுவனம் தற்போது நிறுவனத்துக்குள் மறுசீரமைப்பு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாகத்தான் சொமேட்டோவின் தலைமை நிர்வாக அதிகாரி ராகேஷ் ரஞ்சன் பதவி விலகுகிறார். அதேசமயம் அவர் நிறுவனத்தின் வேறு பதவியில் அவர் தொடருவார் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. 2023 மே மாதத்தில் இந்த பதவியில் ராகேஷ் ரஞ்சம் பணியமர்த்தப்பட்டார்.

சோமேட்டோவுக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கும் வரை, அதன் நிறுவனர் தீபிந்தர் கோயல் உணவு விநியோக பிரிவு வணிகத்தை மேற்பார்வையிடுவார். தற்போது இந்த பதவிக்கு நிறுவனத்தில் உள்ள மற்றும் வெளியாட்களை எட்டர்னல் பரிசீலித்து வருவதாக தகவல். வரும் மாதங்களில் சோமேட்டோவுக்கு புதிய தலைமை நிர்வாக அதிகாரி நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உணவு விநியோகத் துறையில் பரந்த மந்தநிலைக்கு மத்தியில் சோமேட்டோவின் தலைமையில் மறுசீரமைப்பு வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த டிசம்பர் காலாண்டில் எட்டர்னலின் மிகப்பெரிய போட்டியாளரான ஸ்விக்கி. உணவு விநியோக சந்தையில் 43 சதவீத பங்களிப்பை கொண்டிருந்தது. இது முந்தைய காலாண்டில் 42 சதவீதமாக இருந்தது. போட்டி நிறுவனங்கள் 10 நிமிட உணவு விநியோக சேவைகளை விரிவுப்படுத்துவதால், சோமேட்டோ தனது சந்தைப்பங்கினை இழக்க நேரிடும் என எச்சரிக்கை செய்துள்ளனர்
2024 டிசம்பர் காலாண்டில் சோமேட்டோவின் உணவு டெலிவரி வளர்ச்சி மந்தமாகவே இருந்தது. அந்த காலாண்டில் நிறுவனத்தின் மொத்த ஆர்டர் மதிப்பு 2 சதவீதம் மட்டுமே வளர்ச்சி கண்டு ரூ.9,913 கோடியாக இருந்தது. எட்டர்னல் நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, நிறுவனத்தில் அன்னிய முதலீட்டாளர்களி்ன் உரிமையை (பங்கு மூலதனத்தை) 49.5 சதவீதமாக குறைத்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் எட்டர்னல் பங்கு முதலீட்டாளர்களுக்கு 28.52 சதவீதம் ஆதாயம் கொடுத்தது. அதேசமயம் இந்த ஆண்டில் இதுவரை இப்பங்கின் விலை 14.29 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் இப்பங்கின் விலை 6.80 சதவீதம் சரிந்தது. இருப்பினும் கடந்த 3 மாதங்களில் முதலீட்டாளர்களுக்கு 9.82 சதவீதம் லாபத்தை கொடுத்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இப்பங்கின் விலை 6.42 சதவீதம் அதிகரித்துள்ளது.
தங்க பத்திரம்: ஒரு யூனிட் ரூ.9,669.. ரிசர்வ் வங்கி அறிவிப்பால் SGB முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்..!
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மத்திய கிழக்கில் நீடிக்கும் போர்: நாளை இந்திய பங்குச்சந்தைகள் என்ன ஆகும்?முதலீட்டாளர்கள் என்ன செய்ய வேண்டும்?

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!



Click it and Unblock the Notifications