கொரோனா லாக் டவுனால் ஏற்பட்ட தொழில் ரீதியான சிக்கல்களைச் சமாளிக்க மத்திய அரசு தன்னால் ஆன அனைத்து காரியங்களையும் செய்து கொண்டு இருக்கிறது.
குறிப்பாக சிறு குறு தொழில்முனைவோர்களான MSME தரப்பினர்களின் பிரச்சனைகளைத் தீர்க்க பல திட்டங்களை அறிவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
கடந்த மாதத்தில், மத்திய அரசு அறிவித்த, ஆத்ம நிர்பார் திட்டத்தின் ஒரு பகுதியாக, Guaranteed Emergency Credit Line திட்டத்தைக் கொண்டு வந்தது மத்திய அரசு.
சிறப்புக் கடன் திட்டம்
அது தான் சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான பிணை இல்லாத 3 லட்சம் கோடி ரூபாய் கடன் திட்டம். இந்த கடனை யார் எல்லாம் வாங்கலாம், எவ்வளவு ரூபாய் வரை வாங்கலாம், வாங்குவதற்கான தகுதி என்ன, இந்த வகையான கடனில் இருக்கும் நன்மைகள் என்ன என்பதை இரண்டு பாகங்களாக இரண்டு கட்டுரையில் எழுதி இருக்கிறோம். MSME-க்கான Guaranteed Emergency Credit Line பாகம் 1!
15,000 கோடி
இந்த Guaranteed Emergency Credit Line திட்டம் வழியாக நிறைய சிறு குறு தொழில்முனைவோர்களுக்கு கடன் கொடுக்கச் சொன்னது மத்திய நிதி அமைச்சகம்.
Guaranteed Emergency Credit Line கடன் திட்டத்தின் கீழ் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, 1.5 லட்சம் MSME வாடிக்கையாளர்களுக்கு 15,000 கோடி ரூபாய் கடனுக்கு அனுமதி கொடுத்து இருக்கிறார்களாம். அந்த 15,000 கோடி ரூபாயில் 8,700 கோடி ரூபாய் பணம் வழங்கப்பட்டு (Disburse) இருக்கிறதாம்.
உதவிகள்
Guaranteed Emergency Credit Line திட்டம் தவிர, சிறு குறு தொழில்முனைவோர்கள் ஏற்கனவே வாங்கி இருக்கும் கடனை மறு சீரமைப்பது, வொர்க்கிங் கேப்பிட்டல் அளவுகளை மறு கணக்கீடு செய்து கொடுப்பது என பல உதவிகளை செய்து கொண்டு இருப்பதாக எஸ்பிஐ சொல்லி இருக்கிறது.
கூட்டங்கள்
அதோடு மத்திய நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல் படி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, ஒவ்வொரு வட்ட அளவில் MSME-யினருக்காக விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி, சிறு குறு தொழில்முனைவோர்களுக்கான உதவித் திட்டங்கள் மற்றும் கடன் திட்டங்களைக் குறித்து விளக்கி இருக்கிறார்களாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!



Click it and Unblock the Notifications