சர்வதேச பொருளாதாரம், பணவீக்க அச்சம் காரணமாக அமெரிக்கா, ஐரோப்பா, ஆசிய பங்குச்சந்தைகள் மந்தமான வர்த்தக சூழ்நிலையில் இருக்கும் காரணமாக மும்பை பங்குச்சந்தையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலீட்டாளர்கள் அனைவரும் ஏதாவது ஒரு நல்ல வாய்ப்பு கிடைக்காதா என எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும் வேளையில் BCL Industries பங்குகள் முதலீட்டாளர்களுக்கு லட்டு மாதிரி கிடைத்துள்ளது.
BCL Industries-ன் நிர்வாக குழு புதன்கிழமை நடத்திய முக்கியமான கூட்டத்தில் வருகிற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நிறுவனத்தின் பங்குகளை 1:10 கணக்கில் பிரிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஸ்மால் கேப் பங்குகள் தற்போது 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை 1 ரூபாய் மதிப்பிட்டில் 10 ஆக உடைக்க உள்ளது.

இதன் மூலம் இன்று காலையில் BCL Industries பங்குகள் முதலீட்டாளர்களின் முக்கிய டார்கெட் ஆக மாறியது மட்டும் அல்லாமல் அதிகளவிலான முதலீடுகள் இப்பங்குகள் மீது குவிந்துள்ளது. இதன் மூலம் வர்த்தகம் துவங்கிய சில நிமிடத்தில் ஒரு பங்கு விலை 523 ரூபாய் வரையில் உயர்ந்து அசத்தியது.
BCL Industries நிர்வாக குழு புதன்கிழமை நடத்திய கூட்டத்தில் 1:10 கணக்கில் பங்குகளை உடைக்க தேவையான ஒப்புதல்கள் கொடுத்துள்ள நிலையில் அக்டோபர் 27 ஆம் தேதி 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்குகளை 1 ரூபாய் முக மதிப்பு கொண்ட பங்குகளாக உடைக்க உள்ளது.
2023 ஆம் ஆண்டில் அதிகம் லாபம் கொடுத்த பங்குகள் பட்டியலில் BCL Industries முக்கிய இடத்தில் உள்ளது. இந்த வருடத்தின் துவக்கத்தில் 324 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்ட பங்குகள் தற்போது 517 ரூபாய் வரையில் உயர்ந்து முதலீட்டாளர்களுக்கு சுமார் 60 சதவீதம் லாபம் கொடுத்துள்ளது.
இதேபோல் கடந்த 5 வருடத்தில் சுமார் 325 சதவீதம் BCL Industries பங்குகள் உயர்ந்துள்ளது, அதாவது டக்கரான மல்டிபேக்கர் நிறுவனமாக மாறியுள்ளது. இந்த நிலையில் 1:10 ஸ்டாக் ஸ்பிளிட் என்பது முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட் போன்றது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications