பீகார் மாநிலம் பாட்னாவின் ஹனுமன் நகரின் எம்ஐஜி காலனியில் வசித்து வருபவர்கள் ராதே மோகன் பிரசாத் (79) - சாபி பிரசாத் தம்பதி. இவர்கள் இருவரும் மருத்துவர்களாக இருக்கும் நிலையில், இவர்களை சைபர் குற்றவாளிகள், 12 நாட்கள் டிஜிட்டல் காவலில் வைத்து ரூ.1.95 கோடியை பறித்துள்ளனர். அப்போது அந்த குற்றவாளிகள் தாங்கள் சிபிஐ அதிகாரி என்றும் நீதிபதி என்றும் கூறி அந்த தம்பதியை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளனர்.
மேலும், இதுகுறித்து யாரிடமாவது தெரிவித்தால் பிரச்சனை உண்டாகும் என கூறி மிரட்டியுள்ளனர். இதையடுத்து, தம்பதிகள் இருவரும் நேரடியாக வங்கிக்குச் சென்று ஆர்டிஜிஎஸ் மூலம் 6 முறை மாற்றியுள்ளனர். ஆனால், ஒருகட்டத்தில் சந்தேகமடைந்த தம்பதியினர், சைபர் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரளித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினரும் வழக்குப்பதிவு செய்தனர். மே 23ஆம் தேதி முதல் இந்த வயதான தம்பதியினர் சைபர் மோசடிக்கு ஆளாகி வருவதாக டிஎஸ்பி ராகவேந்திர மணி திரிபாதி தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், முதல் அழைப்பு மே 21ஆம் தேதி வந்துள்ளது. அப்போது, அவர்களை தொடர்பு கொண்ட நபர், தன்னை சிபிஐ அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர், மும்பையின் கொலாபா காவல் நிலையத்தில் தம்பதியினர் மீது பண மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மிரட்டியுள்ளார். மேலும், அந்த நபர் வயதான தம்பதிகளை மும்பைக்கு அழைத்துள்ளார். ஆனால், தங்களால் வர முடியாது என தம்பதியினர் கூறியுள்ளனர். பிறகு அழைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, ஒரு வீடியோ அழைப்பும் வந்தது. முன்னாள் அமர்ந்திருந்த நபர் காக்கி சீருடையில் இருந்ததாகவும், அவருக்கு பின்னால் ஒரு காவல் நிலையம் போன்ற அமைப்பு இருந்ததாகவும் தம்பதி கூறியுள்ளனர். அப்போது அவர்கள் பல வழிகளில் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் 15-15 மணி நேரம், வீடியோ அழைப்பு செய்யும் நபருக்கு முன்னால் தம்பதியினர் மன்றாடிக்கொண்டே இருந்தனர். பின்னர், இந்த விஷயத்தை நிர்வகிக்க ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டது. அதற்கு தம்பதி ஒப்புக்கொண்ட நிலையில், ஒரு வழக்கறிஞர் வேடத்தில் அமர்ந்திருந்த ஒருவரிடம் பேசும்படி அவர்களிடம் கூறப்பட்டது.
பின்னர், அவரது ஆலோசனையின் பேரில், தம்பதி வங்கிக்கு சென்றுள்ளனர். மேலும், எங்கள் ஆள் உங்களுக்கு பின்னால் தான் இருக்கிறார் என்று அவர்கள் கூறி மிரட்டியுள்ளனர். இதனால், மர்ம நபர்கள் சொன்னது போலவே, தம்பதியினர் செய்துள்ளனர். மேலும், நீதிபதி வேடமணிந்த ஒருவர் ஆன்லைன் விசாரணையை நடத்தி வழக்கை விசாரித்தார். பின்னர், அவர்கள் ஆன்லைனில் விடுக்கப்பட்டனர். ஆனால், அதற்கு பிறகும், மருத்துவ தம்பதியினரை ஏமாற்ற முயற்சி செய்யப்பட்டது. பின்னர், இது ஒரு மோசடி என்பதை உணர்ந்த அவர்கள் சைபர் கிரைம் எஸ்பியை சந்திக்கச் சென்றனர்.
இந்த தம்பதியில் மூத்த மகன் வெளிநாட்டிலும், இளைய மகன் டெல்லியிலும் வசிக்கிறார். இச்சம்பவம் குறித்து இளைய மகன் டாக்டர் சவுரவ் கூறுகையில், தனது பெற்றோரின் வாழ்நாள் சேமிப்பு மோசடிக்காரர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவ தம்பதியினரின் கூற்றுப்படி, அவர்களின் பசி மற்றும் தாகம் தீர்ந்துவிட்டது. கணவர் வீடியோ அழைப்பில் இருக்கும்போது மட்டுமே மனைவி உணவு சமைக்க அனுமதிக்கப்பட்டார். இரவில், மொபைலை ஆன் செய்து கொண்டு தூங்கச் சொன்னார்கள். அனுமதியின்றி வீட்டை விட்டு வெளியேக் கூடாது என்பது போன்ற கட்டுப்பாடுகளை அந்த மர்ம நபர்கள் விதித்துள்ளனர். இந்நிலையில், இதுதொடர்பான புகாரை அடுத்து, வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம்" என போலீசார் தெரிவித்துள்ளனர்.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications