ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்குவது அத்தனை எளிதான விஷயம் இல்லை. அதற்கு இடத்தை தேர்வு செய்து நிலங்களை கைப்பற்றி அனைத்தையும் முறையாக திட்டமிட வேண்டும். ஒரு அரசாங்கமே ஸ்மார்ட் சிட்டியை கட்டமைக்க பல சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
ஆனால் இங்கே ஒரு கிராம விவசாயிகள் அனைவரும் இணைந்து ஒரு ஸ்மார்ட் சிட்டியை உருவாக்கி ஒட்டுமொத்த நாட்டையே வியக்க வைத்துள்ளனர். 120 விவசாயிகளால் கட்டமடைக்கப்பட்ட இந்த நகரம் பார்ப்பதற்கு சிங்கப்பூரை போல காட்சி தருகிறது. நவீன வசதிகள் கொண்ட பள்ளிகள், மருத்துவமனைகள், மால்கள் என இந்த நகரத்திற்கு வருகை தருபவர்கள் நாம் வெளிநாட்டும் இருக்கிறோமோ என்ற உணர்வை பெறுவார்கள். இப்படி ஒரு ஸ்மார்ட்டான நகரத்தை வடிவமைத்தது 120 விவசாயிகள் என்பது தான் நம் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய உண்மை.

புனே அருகே இருக்கிறது மகர்பட்டா நகரம். 1993 ஆம் ஆண்டு இது விவசாய நிலங்கள் நிறைந்த ஒரு குக்கிராமம். ஆனால் இது தான் தற்போது இந்தியாவே கண்டு வியக்கும் ஸ்மார்ட் சிட்டி. இங்கிருந்த விவசாய நிலங்களை பல்வேறு ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் கையகப்படுத்த முன் வந்தனர். ஆனால் 123 விவசாய குடும்பங்கள் தங்களுடைய பாரம்பரிய நிலங்களை விற்பனை செய்ய மறுத்துவிட்டன. இதற்கு மாற்றாக அவர்களாகவே நிலங்களை ஒருங்கிணைத்து தங்களுக்கான நகரத்தை உருவாக்கினர்.
சதீஷ் மஹர் என்பவர் இதற்கென ஒரு நிறுவனத்தை தொடங்கி அனைத்து விவசாய குடும்பத்தையும் ஒருங்கிணைத்து நிலத்தொகுப்பு முறையை உருவாக்கினார். நிலத் தொகுப்பில் அங்கிருந்த அனைத்து விவசாய குடும்பங்களும் ஒரு பங்குதாரர்களாக மாறினர். அடுத்ததாக அரசின் அனுமதியை பெற்றனர். அரசு அனுமதி பெறுவதும் வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதும் பெரிய சவாலாக இருந்தது.

விவசாயிகளால் சிட்டியை கட்டமைக்க முடியுமா என அனைவரும் எள்ளி நகையாடினார்கள். ஆனால் இந்த விவசாயிகள் அதனை செய்து காட்டியிருக்கிறார்கள். அப்படி உருவானது தான் இந்த மகர்பட்டா நகரம். 400 ஏக்கர் பரப்பளவு கொண்ட நவீனமான டவுன்ஷிப் இது. தற்போது இங்கே ஒரு ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருமானம் வருகிறது.
பள்ளிகள், மருத்துவமனைகள், ஐடி பூங்காக்கள் ஆகியவையோடு மட்டுமில்லாமல் அனைத்து இடங்களிலும் சூரிய ஒளி சக்தியிலிருந்து மின்சாரம் தயாரித்து பயன்படுத்தும் அமைப்புகள், முறையான கழிவு மேலாண்மை அமைப்புகள் அனைத்தும் இங்கே நிறுவப்பட்டு இருக்கின்றன. இங்கே இருந்த விவசாயிகள் தங்கள் நிலங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வழங்கி அதில் கட்டப்பட்ட அனைத்து கட்டுமானங்களில் இருந்தும் மாத வாடகை வருமானம் பெறுகின்றனர்.
வழக்கமாக நிறுவனங்கள் வசம் நிலத்தை வழங்கிவிட்டால் முதலில் அதற்கு கிடைக்கும் பணத்தோடு நின்றுவிடும். ஆனால் விவசாயிகளுக்கு இங்கே தொடர்ந்து வருமானம் வந்து கொண்டே இருக்கிறது. ஏதோ ஒப்ரு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு செல்ல வேண்டிய வருமானம் அனைத்தும் ஸ்மாட்டான இவர்களின் முடிவுகளால் இவர்கள் கைகளுக்கே கிடைக்கிறது.
விவசாயிகள் பலரும் கட்டட உரிமையாளர்களாகவும் தொழில் முனைவோர்களாகவும் மாறியுள்ளனர். இன்றும் இந்த நகரம் இரண்டாம் தலைமுறை விவசாயிகளால் தான் நடத்தப்பட்டு வருகிறது. ஒரு அரசாங்கத்தால் கூட முடியாத ஒன்றை இன்று விவசாயிகள் செய்து காட்டி சாதனை படைத்துள்ளனர்.
More From GoodReturns

வேறு வழியில்லை.. சீனாவிடம் உதவி கேட்கும் இந்தியா.. ஈரான் போருக்கு மத்தியில் புது பிரச்சனை..!!

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

Work From Home.. அடுத்தடுத்து அறிவிப்பை வெளியிட்ட ஐடி நிறுவனங்கள்.. சென்னை ZOHO ஊழியர்களுக்கு 2 வார WFH..!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

ஏஐ தொழில்நுட்பத்தின் கோரமுகம்.. Adode சிஇஓ சாந்தனு நாராயண் வெளியேற்றம்..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!



Click it and Unblock the Notifications