ஹெல்த் இன்சூரன்ஸ் மீது 18% ஜிஎஸ்டி ஏன்..? நிதியமைச்சர் கொடுத்த விளக்கம்..!

2024-25 நிதியாண்டிற்கான நிதி மசோதா 45 திருத்தங்களுடன் லோக்சபாவில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் சொத்து வரி தொடர்பான முக்கியமான திருத்தம் இடம்பெற்றுள்ளது அனைவரும் கவனிக்க வேண்டிய விஷயமாகும். திருத்தப்பட்ட நிதி மசோதாவை தாக்கல் செய்துவிட்டுப் பேசி மத்திய நிதியமைச்சர் இந்த பட்ஜெட் அறிவிப்புகள் நடுத்தர வர்க்கத்திற்குப் பயனளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அப்போது ஹெல்த் இன்சூரன்ஸ் மீதான வரி விவாதத்திற்குப் பதில் அளித்தார்.

சுகாதார காப்பீட்டின் மீதான 18 சதவிகித GST-யை நீக்குமாறு கோரியுள்ள மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரியின் கடிதத்திற்குப் பதிலளித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நிதின் கட்காரியின் கடிதம் பொதுவெளியின் வாயிலாக வந்த காரணத்தால் நாடாளுமன்றத்தில் 200 உறுப்பினர்கள் விமர்சனம் செய்தனர்.

ஹெல்த் இன்சூரன்ஸ் மீது 18% ஜிஎஸ்டி ஏன்..? நிதியமைச்சர் கொடுத்த விளக்கம்..!


இதற்குப் பதிலளித்த நிர்மலா சீதாராமன், "நான் இரண்டு விஷயத்தைக் கூற விரும்புகிறேன், மருத்துவ காப்பீட்டில் வரி விதிப்பு என்பது GST அறிமுகத்திற்கு முன்பே இருந்தது. GST அறிமுகத்திற்கு முன்பே மருத்துவ காப்பீட்டின் மீது மாநில அரசுகளும் வரியை வசூலித்துள்ளது. எனவே இது புதிய பிரச்சனை அல்ல, அது அனைத்து மாநிலங்களிலும் இருந்தது. இங்கு போராட்டம் நடத்துபவர்கள்... தங்கள் மாநிலங்களில் இந்த வரியை நீக்குவது பற்றி விவாதித்தார்களா?" என்று கேள்வி எழுப்பினார்.

மத்திய போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தனது கடிதத்தின் வாயிலாக, சுகாதார மற்றும் ஆயுள் காப்பீட்டிற்கான பிரீமியத்தில் விதிக்கப்படும் GST-யை திரும்பப் பெற வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் நிதின் கட்காரி வலியுறுத்தினார். இது காப்பீட்டுதாரர்களின் வரிச்சுமையைக் குறைத்து, நாட்டு மக்கள் காப்பீட்டு பாதுகாப்பு அதிகம் பெற வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

நாக்பூர் LIC யூனியன் சார்பாக நிதியமைச்சருக்கு நிதின் கட்காரி கடிதம் எழுதினார், "ஆயுள் காப்பீடு பிரீமியத்தில் விதிக்கப்படும் மறைமுக வரி வாழ்க்கையின் நிச்சயமற்ற தன்மை மீது வரி விதிப்பதாகும்" என்று கூறினார்.

இந்தியாவில் காப்பீட்டு துறை வளர்ச்சிப் பாதையில் உள்ளது. பொருளாதார ஆய்வின்படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் காப்பீடு பங்களிப்பு 2023ஆம் நிதியாண்டில் 3.8 சதவிகிதமாக இருந்தது, இது 2035ஆம் நிதியாண்டில் 4.3 சதவிகிதமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், ஆயுள் காப்பீட்டு பிரீமியம் வருடத்திற்கு 6.7 சதவிகித வளர்ச்சியைக் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணமாகத் தனிநபர் காப்பீடு தேவை அதிகரிப்பு, இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் காப்பீட்டு தொழில்நுட்பத்தில் ஏற்படும் முன்னேற்றங்கள் ஆகியவை விளங்குகிறது. இந்த வளர்ச்சி போக்கு, காப்பீட்டு துறையின் எதிர்காலம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+