இந்தியாவில் கடந்த ஒரு வருடத்தில் சுமார் 2,118 பொதுத்துறை வங்கிகளின் வங்கி கிளைகள் மூடப்பட்டோ அல்லது பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளது என ஆர்டிஐ கேள்விகளுக்குப் பதில் வந்துள்ளது.
சந்திரசேகர் என்பவர் ஆர்டிஐ அமைப்பிடம் கேட்ட கேள்விக்குக் கடந்த நிதியாண்டில் இந்தியாவில் சுமார் 10 பொதுத்துறை வங்கிகளை 4 பெரிய வங்கிகளாக இணைக்கப்பட்டது. இந்த இணைப்பு நடவடிக்கையில் பல வங்கி கிளைகள் மூடப்பட்டது.
இதன் வாயிலாகப் பாங்க் ஆப் பரோடாவின் 1,283 வங்கி கிளைகள் மூடப்பட்டோ அல்லது பிற வங்கிகளுடன் இணைக்கப்பட்டோ உள்ளது.
இதுகுறித்து அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் அமைப்பின் பொதுச் செயலாளர் சிஹெச் வெங்கடாசலம் கூறுகையில் பொதுத்துறை வங்கி கிளைகள் குறைந்திருப்பது உண்மை. இது வங்கித் துறைக்கும், நாட்டின் பொருளாதாரத்திற்கும் ஆபத்தானது எனத் தெரிவித்துள்ளார்.
வங்கி கிளைகளை மூடுவதன் மூலம் இத்துறையில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது, மேலும் நாட்டு மக்களுக்கு நிதியியல் சேவை முழுமையாகவும், எளிதாகவும் கிடைக்கக் கட்டாயம் வங்கி கிளைகள் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்ய வேண்டும் எனவும் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.