
ஏற்கனவே தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை சரியாகப் பெய்யாததால் இந்த ஆண்டு நீர் மின் உற்பத்தி பெருமளவு குறைந்துவிட்டது. இதனால் மின் தடை மேலும் கடுமையாகியுள்ளது.
இந் நிலையில் காற்றாலை மின்சாரமும் குறைந்துவிட்டதாக தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானக் கழகம் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு காற்றாலைகள் மூலம் சராசரியாக 3500 மெகாவாட் மின்சாரம் கிடைத்து வந்த நிலையில் நேற்று 125 மெகாவாட் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டதால் காற்றாலை, மின்வாரியத்தின் காலைவாரி விட்டது. இதனால் ஏற்படும் கூடுதல் மின்தடையை பொதுமக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
கடந்த வருடம் காற்றாலை மின் உற்பத்தியில் ஆயிரம் மெகாவாட்டாக இருந்த ஏற்ற, இறக்க வேறுபாடு இந்த ஆண்டு ஜுலையில் 2,400 மெகாவாட்டாக அதிகரித்துவிட்டது.
தமிழகத்துக்கு தேவையான மின்சாரம் அனல் மின் நிலையம், புனல் மின் நிலையம், காற்றாலைகள், டீசல் மின்சார உற்பத்தி நிலையம் உட்பட பல்வேறு வழிகளில் மின்சாரம் தயாரிக்கப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு 12,000 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. இது மேற்கண்ட மின்சார உற்பத்தி நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதில், ஆரல்வாய்மொழி, முப்பந்தல், தூத்துக்குடி, கயத்தாறு, உடுமலைப்பேட்டை போன்ற பகுதிகளிலுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் முக்கிய பங்கை வகித்து வருகிறது. நமக்கு தேவையான மின்சாரத்தில் சராசரியாக 3,500 மெகாவாட் மின்சாரத்தை காற்றாலைகள் நமக்கு அளித்து வந்தன.
ஆண்டு தோறும் ஜுன் முதல் ஆகஸ்டு முடிய மூன்று மாதங்களில் காற்று அதிகம் அடிப்பதால் அதிகபட்ச மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் இந்த மூன்று மாதங்களையும் "பீக் லோட்'' மாதமாக அறிவித்துள்ளனர். ஆனால் இந்த ஆண்டு நிலைமை தலைகீழாக மாறியது.
காற்றாலைகள் மூலம் கடந்த 11ம் தேதி 7.5 கோடி யுனிட் உற்பத்தியானது. தொடர்ந்து 12ம் தேதி 7 கோடி, 13ம் தேதி 7.1 கோடி, 14ம் தேதி 5.3 கோடி, 15ம் தேதி 3.2 கோடி, நேற்று 16ம் தேதி வெறும் 1.6 கோடி யுனிட் மட்டுமே மின்சாரம் பெறப்பட்டது. நடப்பாண்டு பீக் லோட் மாதத்தில் அதிகபட்ச மின்சாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது காற்றாலைகள் உள்ள பகுதிகளில் போதிய மழை இல்லாததால் மின்சார உற்பத்தி வெகுவாக குறைந்துவிட்டது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications