தங்கம் விலை உயர்வதும், குறைவதும் தினசரி நிகழ்வாகிவிட்டது. கடந்த இரண்டு மாதங்களாக குறையத் தொடங்கியிருந்த தங்கத்தின் விலை மேலும் உச்சத்தை தொடத் தொடங்கியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ. 23 ஆயிரத்து 944 ஆக இருந்தது. வியாழக்கிழமை ஒரு பவுனுக்கு ரூ. 48 அதிகரித்து ரூ. 23 ஆயிரத்து 992 ஆனது. இன்று மேலும் ரூ. 56 உயர்ந்ததன் ஒரு கிராம் தங்கம் ரூ. 3006 ஆகவும் ஒரு பவுன் ரூ. 24 ஆயிரத்து 48 ஆகவும், விற்பனையாகிறது. இதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி ஒரு கிலோ ரூ. 63 ஆயிரத்து 610 ஆகவும், ஒரு கிராம் ரூ. 68.10 ஆகவும் உள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் தங்கம் முதன்முறையாக 24 ஆயிரத்தை கடந்து ஒருபவுன் 24, 160 ரூபாய்க்கு விற்பனையானது. பின்னர் படிப்படியாக குறைந்த தங்கம் விலை மீண்டும் உயரத்தொடங்கியுள்ளது. இதற்குக் காரணம் சர்வதேச சந்தையில் தங்கம் விலை அதிகரிப்பும், இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வும் காரணமாக கூறப்படுகிறது.
திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. தவிர பங்கு சந்தையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பும், இந்த விலை உயர்வுக்கு காரணமாக கூறப்படுகிறது.
தங்கம் விலை உயரத்தொடங்கியுள்ளதால் நுகர்வோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.