தேசிய பங்குச்சந்தை நான்கே நாட்களில் 400 பங்கு குறியீட்டு புள்ளிகளும் மேல் சரிந்தது. கடந்த சில நாட்களில் பொதுத்துறை வங்கிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் பங்குகள் பலத்த அடி வாங்கின. ரூபாயின் சரிவைத் தடுக்க இந்திய ரிசர்வ் வங்கி எடுத்த தொடர்ச்சியான நடவடிக்கைகளே இந்த சரிவிற்கு காரணமாக அமைந்தன. ஜூலை 23 ல் 6,088 புள்ளிகளுடன் முடிவடைந்த தேசிய பங்குச்சந்தை, ஆகஸ்ட் 2 ல் 5677 புள்ளிகளுக்குச் சரிந்தது.

வங்கி, FMCG, அடிப்படை கட்டமைப்புத்துறை சார்ந்த பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. HDFC போன்ற பெரும் வங்கிகளும் தப்பவில்லை. ஹிந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனத்தின் தலைமையில் FMCG துறைப் பங்குகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சின. தகவல் தொழில்நுட்பம், மருத்துவ துறை பங்குகள் மட்டுமே வெந்த புண்ணுக்கு ஒத்தடம் கொடுத்தன.
இப்போதைய கேள்வி சந்தையின் கதி அடுத்து என்னவாகும்?
இந்திய சந்தையின் ஆதாரம் பலவீனமாகவே இருக்கிறது. நடப்புக்கணக்கு பற்றாக்குறை மற்றும் நிதிக் பற்றாக்குறை கவலை அளிக்கின்றன. பொருளாதார வளர்ச்சியும், பணவீக்கமும் தொடர்ந்து சரிவை நோக்கி செல்கிறது.
அதிகமான விலை ஆதாய விகிதாச்சாரத்தின் விளைவாக இந்திய பங்குகளின் மதிப்பும் அதிகமாகவே இருக்கிறது. இது போதாதென்று ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்த எடுத்த நடவடிக்கைகளின் விளைவாக வங்கிகளும் சேமிப்பு கணக்குக்கான வட்டியை அதிகரித்து விட்டன. மேற்கண்ட நடவடிக்கைகளின் விளைவாக சந்தை மேலும் சரிய வாய்ப்புகள் உள்ளன.
இன்னும் சில மாதங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலை ஒட்டி, கொள்கை முடிவுகளில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இல்லை. சரியும் ரூபாய் மதிப்பை தடுக்க எடுக்கப்படும் எந்த நடவடிக்கையும் பலன் அளிப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தவில்லை. அந்நிய முதலீட்டுக்கு திறக்கும் கதவு நீண்ட காலத் திட்டமே ஆகும். இந்த கட்டுரையை எழுதிக்கொண்டு இருக்கும் வேளையில், ரூபாய் மதிப்பு புதிய வீழ்ச்சியைத் தொட்டுவிட்டது.
கூட்டிக்கழித்து பார்க்கும்போது, சந்தை மேலும் சரிவது நிதர்சனமான உண்மை. அமைச்சர்களின் "பொருளாதாரச் சீர்திருத்தம்" என்ற தொலைக்காட்சித் பேட்டிகள் வெட்டி வேலையாகவே தோன்றுகின்றன. இப்போது அடிக்கடி உச்சரிக்கப்படும் "பொருளாதாரச் சீர்திருத்தம்" மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்டு இருந்தால், ஒருவேளை சரிவு ஏற்படாமல் இருந்திருக்கும். இன்றைய நிலைமையில் பன்னாட்டு முதலீட்டு தர ஆய்வு நிறுவனங்கள் குறைத்து மதிப்பிடாமல் இருந்தாலே போதும் என்ற நினைப்புதான் மேலெழும்புகிறது.
More From GoodReturns

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

ட்ரம்ப் - ஈரான் மோதல்: இந்திய வங்கித்துறையில் பாதிப்பு ஏற்படுமா? RBI உத்தரவின் பின்னணி என்ன?

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!



Click it and Unblock the Notifications