இந்தியாவின் சக்திவாய்ந்த பெண்கள்!!!

சென்னை: இன்றைய வாழ்க்கை முறையில் ஆணும் பெண்ணும் சரிசமமாக அனைத்து துறைகளிலும் சிறந்து விழங்குகின்றனர். அது மட்டும் அல்லாமல் பெருநிறுவனங்களிலும், பெரும் பதவி வகுக்கிறார்கள். இவை எல்லாம் உலகத்தில் சில பத்தாண்டுகளுக்கு முன் நடந்தவை.

ஆனால் நம் இந்தியாவில் நூறு ஆண்டுகளுக்கு முன்பே பெண்கள் திறமைசாளியாகவும், தைரியமானவர்களாகவும் திகழ்ந்தனர். இந்திய சுதந்திர போரட்டத்தில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் களத்தில் இரங்கி போரிட்டனர். சுதந்திரம் அடைந்த பின்னரும் அரசியலில் துணிவுடன் கலந்து கொண்டனர்.

இந்திய அரசியலில் நிங்க இடம்பிடித்த இந்திரா காந்தியும் ஒரு பெண் தான். இவர் செய்ய பணிகள் இன்றளவும் பேசப்படுகிறது. இதே போல் உலகலவில் கலக்கும் இந்திய பெண்களை பற்றி இங்கு பார்போம். மேலும் இவர்களை இந்தியாவின் சக்தி வாய்ந்த பெண்கள் என உலகளவில் போற்றப்படுகிறார்கள்.

சோனியா காந்தி

சோனியா காந்தி

இந்த பட்டியலில் முதல் இடம் பிடிப்பவர் சோனியா காந்தி. இவர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆவார். உலக புகழ்பெற்ற ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிடும் அறிக்கையில் உலகளவில் சக்தி வாய்ந்த பெண்களின் பட்டியலில் இவ்வருடம் 13வது இடத்தை சோனியா காந்தி பிடித்துள்ளார். அவர் விதியின் விளையாடால் அரசியலில் அறிமுகப்படுத்தபட்டார். இவர் இத்தாலியர் என்றாலும், ராஜிவ் காந்திவுடன் திருமனம் ஆன பிறகு நேரு-காந்தி குடும்பத்தில் சேர்ந்தார். இவர் தலைமையில் 2004ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது.

அருந்ததி ராய்

அருந்ததி ராய்

இவரது கட்டுரைகள் முலம் உலகத்தின் பார்வை நம் பக்கம் நம் பக்கம் திரும்பியது. மேலும் இவர் உலகமயமாக்கல் எதிராக போராடி வருகிறார். 1997 ஆம் ஆண்டில் தனது முதல் நாவலான தி காட் ஆஃப் ஸ்மால் திங் முலம் புக்கர் பரிசை வென்றார்.

கிரண் பேடி

கிரண் பேடி

கிரண் பேடி இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் ஆவார். டெல்லி திகார் ஜெயில் மேம்பாட்டில் என்னற்ற மாற்றங்களை கொன்டுவந்தார். இவர் செய்த செயல்களின் முலம் போதை பொருள், போக்குவரத்து மேலாண்மை மற்றும் விஐபி பாதுகாப்புகளை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்திரா நூயி

இந்திரா நூயி

இந்திரா நூயி, உலக உணவு மற்றும் குளிர்பான துறையின் மிகப்பெரிய நிறுவனமான பெப்ஸியின் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். இவர் சென்னையில் பிறந்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஃபோர்ப்ஸ் இதழ் நடத்திய சர்வேவில் இவர் முக்கிய இடங்களை பிடித்தார். இவர் இந்தியர் என்பதில் நமக்கு பெருமை, அதேசமயம் இவர் அமெரிக்க குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகிறார் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.

மேரி கோம்

மேரி கோம்

இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாயான இவர், குத்து சண்டையில் 5 உலக பட்டங்களும், லண்டன் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் பதக்கம் பெற்றவர். இவர் லண்டன் ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு இந்தியாவின் நட்சத்திரமாக திகழ்கிறார்.

 சாய்னா நேவால்

சாய்னா நேவால்

ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்தாட்டமும் ஒன்று. இதில் முதன்முதலாக பதக்கம் வென்றது சாய்னா நேவால் தான். இந்த பெருமை இவருக்கு தான் சென்று அடையும். கடந்த சில வருடங்களாக இந்தியாவில் உள்ள இளம் பெண்களுக்கு இவர் தான் ரோல் மாடல்.

சாந்தா கோச்சர்

சாந்தா கோச்சர்

இந்திய வணிக துறையில் மிக சக்தி வாய்ந்தவராக சாந்தா கோச்சர் விளங்குகிறார். இவர் ஐசிஐசிஐ வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆவார். 1984ஆம் ஆண்டு ஐசிஐசிஐ வங்கியில் பணியில் சேர்ந்தார்.  இவரின் முயற்சியின் முலம் இவ்வங்கியின் மிதிப்பு இரண்டு மடங்கனது.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+