சென்னை: 2013 Q2வில் தங்கத்திற்கான நுகர்வோர் கிராக்கி, சுமார் 53% சதவீதமாக உயர்வடைந்துள்ளது என்று வேர்ல்டு கோல்டு கவுன்சில் (WGC) கோல்டு டிமாண்ட் டிரெண்ட்ஸ்-இன் சமீபத்திய தகவலறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், சமீபத்தில் தங்க விலையில் ஏற்பட்ட சரிவுகள், தங்கத்திற்கான மிகப் பெரும் சந்தைகளான இந்தியா மற்றும் சீனா ஆகிய நாடுகளின் நுகர்வோரிடையே, தங்கத்திற்கான கிராக்கியை குறிப்பிடத்தக்க அளவு உயரச்செய்துள்ளன.
"கடந்த ஆண்டின் Q2 காலாண்டில் சுமார் 421 டன்னாக இருந்த தங்க ஆபரணத்திற்கான கிராக்கி, உலக அளவில், 2013 Q2வில் சுமார் 37% சதவீதம் வரை உயர்ந்து, 2008 Q3க்குப் பின் காலகட்டத்தில் அதிகபட்ச அளவான 576 டன் அளவை எட்டியுள்ளது. ஒரு வருடத்துக்கு முந்தைய காலத்தோடு ஒப்பிடுகையில், தங்கத்திற்கான மவுசு சீனாவில் சுமார் 54 சதவீதமும், இந்தியாவில் சுமார் 51 சதவீதமுமாக அதிகரித்துள்ளது. தங்க ஆபரணங்களுக்கான கிராக்கி, உலகின் இதர பகுதிகளிலும் குறிப்பிடத்தக்க அளவு உயர்ந்துள்ளது: தங்கத்திற்கான மவுசு, மத்திய கிழக்குப் பகுதிகளில் சுமார் 33 சதவீதமும், டர்க்கியில் சுமார் 38 சதவீதமுமாக கூடியுள்ளது." என்று வேர்ல்டு கோல்டு கவுன்சிலிலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை உரைக்கிறது.
தங்கம் மிதான முதலீடு
தங்கக்கட்டி மற்றும் நாணயங்களில் செய்யப்படும் முதலீடுகள், கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், உலக அளவில் சுமார் 78 சதவீதம் வரை உயர்ந்து, முதன் முறையாக ஒரு காலாண்டில் சுமார் 500 டன்னையை எட்டியுள்ளது.
உலகளாவிய தங்கத்தின் கிராக்கி
தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்களுக்கான கிராக்கி, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், சீனாவில் சுமார் 157 சதவீதம் வரை உயர்ந்துள்ள அதே வேளையில் இந்தியாவில் சுமார் 116 சதவீதம் வரை உயர்ந்து வரலாறு காணாத அளவான 122 டன்னையை எட்டியுள்ளது. தங்க ஆபரண கிராக்கி, தங்கக்கட்டிகள் மற்றும் நாணயங்களில் செய்யப்படும் முதலீடுகள் ஆகியவற்றை மொத்தமாக நோக்குகையில், தங்கத்துக்கான உலகளாவிய நுகர்வோர் கிராக்கி, இந்த காலாண்டுடில் மொத்தமாக சுமார் 1,083 டன்னையை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 53% அதிகமாகும்.
71 டன் தங்கத்தை கொள்முதல் செய் மத்திய வங்கிகள்
தொடர்ந்து பத்து காலாண்டுடாக, மத்திய வங்கிகள் தங்கத்தின் நிகர கொள்வனவாளர்களாக விளங்கி, சுமார் 71 டன் வரையிலான தங்கத்தை கொள்முதல் செய்கின்றனர். இது 2011 Q1-இல் ஆரம்பித்த இந்த நடைமுறைக்கு மேலும் வலு சேர்ப்பதாகத் திகழ்கிறது.
தொழில்நுட்பத்துறையில் சுமார் 104 டன் வரையில் காணப்படும் கிராக்கி, கடந்த ஆண்டைக் காட்டிலும் 1% உயர்ந்து, மீண்டும் உறுதியான நிலையை அடைந்துள்ளது.
தங்க இடிஎஃப்களில் சரிவு
இந்த இடைப்பட்ட காலத்தில், 2012 ஆம் ஆண்டில் உலகின் தங்க கிராக்கியில் சுமார் 6% வரையிலான பங்களிப்புடன் காணப்பட்ட தங்க இடிஎஃப்கள், தற்போது 400 டன்னுக்கும் அதிகமான அளவு சரிவை சந்தித்து, ஹெட்ஜ் ஃபண்ட்களால் உந்தப்பட்டு, இதர யூக முதலீட்டாளர்கள் தங்கள் இடங்களை காலி செய்து கொண்டு போவது தொடர்ந்து கொண்டிருக்கக்கூடிய நிலையில் உள்ளது. இது அமெரிக்காவில் அதிகமாக காணப்படுகிறது.
2013 Q2வில் தங்கத்திற்கான கிராக்கி
ஆக மொத்தம், 2013 Q2வில் தங்கத்திற்கான கிராக்கி சுமார் 856 டன், இது சென்ற வருடத்தைக் காட்டிலும் சுமார் 12% குறைந்திருக்கிறது. உற்பத்தி தரப்பில், இந்த காலாண்டில் ரீசைக்ளிங் சுமார் 21% வரை சரிந்தும், சுரங்கத் தொழில் உற்பத்தி, சென்ற வருடத்தைக் காட்டிலும் சுமார் 4% உயர்ந்து, 732டியாகவும் இருந்துள்ளன.
மொத்தத்தில், விநியோகம் கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 6% வரை குறைந்துள்ளது.
வேர்ல்டு கோல்டு கவுன்சில்
வேர்ல்டு கோல்டு கவுன்சிலின் முதலீட்டுத் துறையின் நிர்வாக இயக்குநரான மார்க்கஸ் க்ரப், கூறுகையில் "முதல் காலாண்டில் இருந்ததைப் போன்றே, இரண்டாவது காலாண்டிலும், இடிஎஃப் வர்த்தகத்தின் மூலம் சந்தைக்கு வரும் தங்கம், தங்கக்கட்டிகள், ஆபரணங்கள் மற்றும் நாணயங்களுக்கான பெரும் கிராக்கியை எதிர்கொள்ள நேர்ந்ததனால், சந்தையில் மீண்டும் சமன்பாட்டுடன் இருப்பதான போக்குடன் காணப்படுகிறது. தங்கக்கட்டிகள் மற்றும் நாணய முதலீடுகளில் காணப்படும் இந்த எழுச்சி, உலகெங்கிலும் உள்ள முக்கிய சந்தைகளில் மிக சாதாரணமான ஒரு விஷயமாக இருக்கும் அதே வேளையில் இது உலகின் மிகப்பெரும் தங்கச் சந்தைகளான இந்தியா மற்றும் சீனா ஆகியவற்றில் மிக முக்கியத்துவம் பெற்ற ஒன்றாகக் கருதப்படுகிறது." என்று கூறினார்.
ஜூன் மாத பரிவர்த்தனைகள்
ஜூன் மாதத்தின் போது புல்லியன் அக்கவுன்ட்டுகளுக்கு இடையே நடைபெற்ற பரிவர்த்தனைகளில் கைமாறியுள்ள தங்கத்தின் அளவு, வலுவான ஆசிய கிராக்கியினால் ஊக்கமளிக்கப்பட்டு, தொடர்ந்து இரண்டாவது முறையாக, கடந்த 12 வருடத்தில் காணாத உயரத்தை எட்டியுள்ளதாக, எல்பிஎம்ஏவிலிருந்து வந்திருக்கும் தகவல், மேற்கிலிருந்து கிழக்குக்கு மாறியிருக்கும் இந்த இடப்பெயர்ச்சிக்கு மேலும் வலு சேர்த்துள்ளது." என்று விமர்சனம் செய்துள்ளார்.