மும்பை: இன்று வர்த்தக துவக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 65.36 ரூபாய் சரிந்தது. சில மணி நேரத்தில் அதன் குறைந்த மதிப்பான 65.56 என்ற நிலையை தாண்டி 65.96 என்ற நிலையை அடைந்தது. இதனால் ரூபாய் மதிப்பு "வரலாற்று சாதனைப் படைத்தது" என்பதை மிகுந்த வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம்.
இதனால் பங்கு வர்த்தகமும் கடுமையாக பாதித்தது. சென்செக்ஸ் 584.49 புள்ளிகள் சரிந்து 17973.64 புள்ளிகளை அடைந்தது, நிஃப்டி 195.5 புள்ளிகள் சரிந்து 5281.00 புள்ளிகளை அடைந்தது. நம் இந்திய சந்தை மட்டும் இல்லாமல் உலக சந்தைகளும் கடுமையாக பாதித்தது.
உலக சந்தைகள்
நாஸ்டாக் (அமெரிக்கா) 0.22 புள்ளிகள் சரிந்தன
ஹேங் செங் (ஹாங்காங்) 133 புள்ளிகள் சரிந்தன
நிக்கேய் 225 (ஜப்பான்) 93.91 புள்ளிகள் சரிந்தன
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (சிங்கப்பூர்) 42.41 புள்ளிகள் சரிந்தன
வர்த்தக துறைகளும் சரிவு
மேலும் இந்தியாவில் அனைத்து முக்கிய துறைகளின் பங்குகள் பலத்த அடிவாங்கியது. முக்கியமாக எஃப்எம்சிஜி, ஆட்டோமொபைல், பொதுத்துறை நிறுவனங்கள், உலோக, பவர் மற்றும் ரியல் எஸ்டேட் துறை கடுமையாக பாதித்தது.
ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் பாதிப்பு
டாலர் எதிரான ரூபாயின் மதிப்பு குறைந்ததால் இந்தியாவில் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடுமையாக பாதித்ததுள்ளது. மேலும் பங்குசந்தையில் அன்னிய முதலீடுகள் குறைந்து கொண்டே வருவதால், நடப்பு கணக்கிள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
வீணாகும் முயற்சிகள்
ரூபாய் மதிப்பை கட்டுப்படுத்த எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகிறது.
எங்கே.. செல்லும்... இந்த பாதை......(இந்திய பொருளாதாரம்)....