6000 கிரெடிட் கார்டு மோசடி வழக்குகள்!!!

மும்பை: தொழில்நுட்பம் வளர்ந்து வருவதால் மகிழ்வதா அல்லது வருத்தப்படுவதா என்று தெரியவில்லை. எங்கு திரும்பினாலும் ஹய் டெக் முறையில் திருட்டு கொள்ளை. இத்தகைய திருட்டுகளை மையப்படுத்தி மக்களவில் பல கேள்விகள் எழுந்தது.

புதன் கிழமை நடந்த மக்களவை கூட்டத்தில் பேசிய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மிலிந் தியோரா, 2013 ஆண்டில் மட்டும் சுமார் 6,034 வழக்குகள் கிரேடிட் மற்றும் டெபிட் கார்டு மோசடிகளுக்கு எதிராக பதிவாகி உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கியின் அறிக்கை கூறுகிறது எனதெரிவித்தார்.

6000 கிரெடிட் கார்டு மோசடி வழக்குகள்!!!

மேலும் இதில் 2,646 வழக்குகள் ஹேக்கிங் முறையில் மோசடியிலும், 1440 வழக்குகள் கணினி தொலைந்ததன் மூலம் மோசடி செய்யப்பட்டதாகவும் வழக்குகள் பதிவாகியுள்ளது என அவர் தெரிவித்தார்.

தேசிய குற்ற ஆவண பிரிவின் தகவல்கள் படி 259 சைபர் குற்ற வழக்குகளும், 118 குற்றம் செய்தவர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இந்த வழக்களின் மீது சுமார் 749 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாவும் அந்த அறிக்கை தெரிவிக்கிகிறது.

மேலும் சமுக வலைதளங்களில் கிடைக்கும் தகவல்களை கொண்டு பல மோசடிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். சமுக வலைதளங்களில் பல்லாயிறக்கனக்கான போலி கணக்குகள் உள்ளது. இதனை அகற்றுவது மிகவும் கடினம் என்றாலும் இதற்காக பல முயற்சிகள் நடைபெற்று வருகிறது என மிலிந் தியோரா தெரிவித்தார்.

இத்தகைய மோசடிகளை தடுக்கவும், குறைக்கவும் பொது மக்களுக்கு பல விழிப்புணர்வு அளிக்கும் வகையில் முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. சமுக வலைதளங்களில் பாதுகாப்புடன் செயல்படவும் மக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+