
எஸ்பிஐ வங்கியின் வீட்டுக் கடன்கள் திட்டங்களை தற்போது 75 லட்சம் ரூபாய்க்கு கீழ் மற்றும் 75 லட்சம் ரூபாய்க்கு மேல் என்ற இரண்டு வகையில் வழங்கப்பட்டு வருகின்றன.
சுமார் 75 லட்ச ரூபாய் வரையிலான கடன் தொகை, புதிதாக கடன் பெறுவோர்க்கு, தற்போது நடைமுறையில் உள்ள 10.50 சதவீதத்துக்கு எதிராக சுமார் 10.15 சதவீதத்தில் வழங்கப்படும். கடன் பெறுவோரில் பெண்களுக்கு, சுமார் 0.05 சதவீத சலுகைக்குப் பின் வட்டி விகிதம் 10.10 சதவீதமாக இருக்கும்.
புதிய கடன் விகிதங்கள் நாளை முதல் நடைமுறைக்கு வரும் என்று ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
75 லட்ச ரூபாய்க்கு மேலான கடன் தொகைகளைப் பொறுத்தவரை, புதிய விகிதம் சுமார் 10.30 சதவீதமாக இருக்கும். கடன் பெறுவோரில் பெண்களுக்கு இந்த விகிதம் சுமார் 10.25 சதவீதமாக இருக்கும்.
30 வருடங்கள் வரையிலான கடனுரிமை காலத்துக்கான புதுப்பிக்கப்பட்ட இஎம்ஐ, சுமார் 885 ரூபாய் (பெண்களுக்கு) மற்றும் 889 ரூபாய் (மற்றவர்களுக்கு) ஆக இருக்கும். 1 லட்ச ரூபாய் வரையிலான கடனுக்கான வழக்கமான இஎம்ஐ, 30 வருடங்களுக்கு சுமார் 900 ரூபாயாக உள்ளது என்றும் அது கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ), புதன் கிழமையன்று நடைபெற்ற அதன் மானிட்டரி பாலிஸி மறுசீராய்வின் போது, குறைந்த கால கடன் விகிதத்தை எவ்வித மாற்றமுமின்றி 7.75 சதவீதமாக வைத்திருக்கவும், கேஷ் ரிசர்வ் ரேஷியோவை (சிஆர்ஆர்) 4 சதவீதமாகவே வைத்திருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
எஸ்பிஐ, அக்டோபர் மாதத்தில், கார் மற்றும் நுகர்வோர் பொருட்களுக்கான கடன்கள் மீதான வட்டி விகிதங்களை குறைத்துள்ளதோடு, பண்டிகைக்கால மவுசை பயன்படுத்திக் கொண்டு பணம் செய்யும் நோக்கில் ப்ராசஸிங் கட்டணங்களை குறைக்கவும் முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications