சென்னை: பங்கு சந்தை வர்த்தகம் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் உயர்ந்தது. அதிலும் நிப்டி 2014ஆம் வருடத்தின் உச்சத்தை தொட்டது குறிப்பிடதக்கது.
இன்று காலை வர்த்தக துவக்கம் முதல் மும்பை பங்குசந்தை நல்ல சுறுசுறுபுடன் செயல்பட்டதனால் வர்த்தகம் பெரும் வளர்ச்சியை எட்டியது. மும்பை பங்கு சந்தையில் சுமார் 237.01 புள்ளிகள் அதிகரித்து 21513.87 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிப்டி 71.45 புள்ளிகள் உயர்ந்து 6400.10 புள்ளிகள் உயர்ந்து 2014ஆம் வருடத்தின் உச்சத்தை தொட்டது மிகழ்ச்சிக்குரிய ஒன்று.
பங்கு சந்தை
இன்று காலை முதல் வர்த்தகம் மந்த நிலையை தாண்டி மிகவும் புத்துணர்வுடன் செயல்படுகிறது. மேலும் உக்ரைன் ரஷ்யா போர் மூண்டும் அபாயத்தால் பங்கு வர்த்தகம் கடந்த இரண்டு நாட்களாக பதற்றத்துடன் இருந்தாலும் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியது குறிப்பிடதக்கது.
வர்த்தக பற்றாக்குறை
மேலும் இந்த உயர்வால் வர்த்தக பற்றாக்குறை குறைந்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு குறைந்தது. இது மத்திய அரசிற்கு மிகவும் மிகிழ்ச்சியான செய்தி என்றே சொல்லலாம்.
டாலர் - ரூபாய்
வர்த்தக பற்றாக்குறை குறைந்ததற்கு முக்கிய காரணம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு. ஏற்றுமதி அதிகரித்தன் காரணமாக ரூபாய் மதிப்பு 61.33 என்ற அளவிற்கு உயர்ந்தது குறிப்பிடதக்கது. இது
லாபகரமான நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் ஐசிஐசிஐ வங்கி, ரிலையன்ஸ், ஒஎன்ஜிசி, ஹெச்டிஎஃப்சி அகிய நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்தது.
அன்னிய முதலீடு
இன்று காலை முதல் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர் மூலம் அதிகப்படியான அன்னிய முதலீடு கிடைத்தது. இதன் விவரம் நாளை காலையில் தெரியவரும்.


Click it and Unblock the Notifications