டெல்லி: மும்பை பங்கு சந்தையில் நேற்று வரலாற்று சாதனை படைத்தது. நேற்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே மும்பை பங்கு சந்தை மற்றும் நிப்டி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மும்பை பங்கு சந்தையில் 22,722 புள்ளிகள் வரை எட்டியது, அதேபோல் நிப்டியில் 6,802 புள்ளிகள் அடைந்து வரலாற்று சாதனை படைத்தது. தேர்தல் காலம் என்பதால்
இந்த உயர்வை பற்றி சந்தை வல்லுனர்களை கூறுகையில், இத்தகைய சந்தை உயர்விற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான "மோடியின் காற்று" தான் என சிலர் கூறுகின்றனர்.
மேலும் சிலர் அமெரிக்க நிதி கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகளவில் உள்ளது, பங்கு சந்தையில் சில முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்டதன் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது என தெரிவித்தனர்.
யூபிஎஸ் கணிப்பு
சுவிஸ் நாட்டின் வங்கி செயலாக்கப் பிரிவான யூபிஎஸ் கணிப்பின் படி இந்திய வர்த்தக சந்தையில் தேர்தல் காரணமாக நிப்டியில் 6900 புள்ளிகள் வரை எட்டலாம் என கணித்திருந்தது.
ஆட்சி மாற்றம்
இந்தியாவில் சாதகமான மற்றும் நிலையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்திய பங்கு சந்தை மற்றும் அதன் வர்த்தகம் வரலாறு காணாத சில உயர்வுகளை எட்டும் என யூபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
பாரத ஜனதா கட்சி
மேலும் பாரத ஜனதா கட்சி தலைமையில் மோடி ஆட்சி பொருப்பிற்கு வரும் போது இந்திய பொருளாதாரம் இது வரை காணத சில உயர்வுகளை எட்டும் என நிதியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய வர்த்தகம்
இன்றைய வர்த்தகத்தை பார்க்கும் போது மும்பை பங்கு சந்தையில் 45.60 புள்ளிகள் உயர்ந்து 22747.98 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் நிப்டியில் 14 புள்ளிகள் உயர்ந்து 6810.20 புள்ளிகளை அடைந்தது.


Click it and Unblock the Notifications