மும்பை பங்கு சந்தை மீண்டும் 25,000 புள்ளிகளை எட்டியது!!

மும்பை: நரேந்திர மோடி அவர்கள் இன்று பிரதமர் பதவியேற்கும் நிலையில் மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் மீண்டும் 25,000 புள்ளிகளை எட்டியது. இதற்கு முன் தேர்தல் எண்ணிக்கை நாட்களில் இதுபோன்ற நிகழ்வு நடந்தது குறிப்பிடதக்கது. இதனால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் முதலீடு செய்கின்றனர்.

இன்று காலை சந்தை 24,913.89 புள்ளிகளில் துவங்கி வர்த்தகம் அடுத்த சில நிமிடங்களில் 25,000 புள்ளிகளை எட்டியது இதனால் காலை 9.10 முதலே சந்தையில் அனல் பறக்கிறது.

லாபம் பெற நிறுவனங்கள்

லாபம் பெற நிறுவனங்கள்

இன்றைய வர்த்தகத்தில் ஐஆர்பி இன்ஃபரா, இந்தியன் பாங்க், நெய்வேலி டிக்னைட், ரிலையன்ஸ பவர் மற்றும் சுஸ்லான் எனர்ஜி ஆகிய நிறுவனங்கள் சிறப்பான லாபத்தை பெற்று வருகிறது. மேலும் மோடி தலைமையிலான அரசு மின்சரா உற்பத்தியில் அதிக கவனம் காட்டுவதின் காரணமாக எனர்ஜி நிறுவனங்களின் பங்குகள் சூடுபிடக்க துவங்கியுள்ளன.

அதிக வர்த்தகம்

அதிக வர்த்தகம்

காலை வர்த்தகம் துவங்கிய முதல் யூனைட்டட் ஸ்பிரிட்ஸ், எஸ்பிஐ, ரிலையன்ஸ் பவர், ஐஆர்பி இன்ஃபரா, மற்றும் அதானி என்டர்பிரைசர்ஸ் நிறுவனங்களின் பங்குகள் அதிகப்படியாக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

தங்கம்

மேலும் மெட்டல் வர்த்தகத்தில் தங்கத்தின் விலை கடந்த இரண்டு வருடமாக 1,300 டாலருக்கு குறைவாகவே வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் உக்ரைன் நாட்டில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும் பணக்காரரான பெட்ரோ போரோஷன்கோ வெற்றி பெற்றதினால் மெட்டல் வர்த்தக சந்தை அடுத்த சில நாட்டிகளில் சூடுபிடிக்க துவங்கிவிடும்.

பங்கு சந்தை

பங்கு சந்தை

தற்போது மும்பை பங்கு சந்தையில் சென்செக்ஸ் 374.30 புள்ளிக் உயர்ந்து 25,067.65 புள்ளகளை எட்டியுள்ளது, அதேபோல் நிப்டியில் 104.85 புள்ளிகள் உயர்ந்து 7,471.95 புள்ளிகளை எட்டியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+