தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி மீண்டும் உயர்வு!!

டெல்லி: ஈராக்கில் நடக்கும் பிரச்சனைகளின் காரணமாக கச்சா எண்ணெயின் விலை அதிகரித்ததை தொடர்ந்து, இன்று மத்திய அரசு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ளது. 10 கிராம் தங்கத்திற்கு இறக்குமதி வரியாக 411 டாலரும், 1 கிலோ வெள்ளியின் இறக்குமதி வரியாக 632 டாலராக இருந்தது குறிப்பிடதக்கது.

இதற்கு முன் தங்கத்திற்கு 408 டாலராகவும், வெள்ளிக்கு 617 டாலராகவும் இறக்குமதி வரி இருந்தது குறிப்பிடதக்கது. இத்தகைய இறக்குமதி வரி அதிகரிப்பால் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தாலும், தங்கம் கடத்தல் அதிகரிக்கும் என வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் ஈராக் பிரச்சனை முடியும் வரை தங்கம், வெள்ளி, மற்றும் கச்சா எண்ணெயின் விலையில் நிலைற்ற தன்மையில் இருக்கும்.

தங்கம், வெள்ளியின் இறக்குமதி வரி மீண்டும் உயர்வு!!

மேலும் இந்த விலை மாற்றம் பற்றிய அறிவிப்பை கலால் மற்றும் சுங்க மத்திய வாரியம் அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கி மற்றும் நிதியமைச்சகம் இணைந்து ஆலோசனை செய்து கடந்த மாதம் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் சில தளர்வுகளை அறிவித்தது. இதனால் தங்கம் இறக்குமதியில் சிறப்பான வளர்ச்சை எதிர்ப்பார்க்க முடிந்தது.

சில மாதங்கள் முன்பு வரை நடப்பு கணக்கு பற்றாக்குறையை குறைக்க தங்க இறக்குமதியில் கடுமையான கட்டுப்பாடுகள் இருந்தது. இதனால் 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தங்க இறக்குமதி சுமார் 74 சதவீதம் சரிந்தது குறிப்பிடதக்கது. மேலும் இந்த காலகட்டத்தில் இறக்குமதி செய்யப்பட்டு தங்கத்தின் மதிப்பு 1.75 பில்லியன் டாலர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+