டெல்லி: ரூ.26.000 கோடி மோசடி வழக்கில் சிக்கிய சுபத்ரா ராய் ஜாமீனில் வெளிவர சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி 5,000 கோடி ரூபாய் உறுதி தொகையும் ரூ.5,000 கோடி வங்கி உறுதியும் கோரியது. இத்தொகையை உடனடியாக அளிக்க முடியாத ராய் நீதிமன்றத்திற்கு மனுவுக்கு மேல் மனு அளித்து பயன் இல்லாமல் போது. ஆகையால் தற்போது 3,117 கோடி ரூபாய் இப்போதும், மீதமுள்ள 1,883 கோடி ரூபாய் கூடிய விரைவில் செலுத்துவதாக ராய் செபியிடம் தெரிவித்தார்.
இதனை ஏறுக்கொண்ட செபி நீதிமன்றத்திற்கு பதில் அனுப்பியுள்ளது. இவர் திகார் ஜெயிலில் இருந்து வருவரா என்பது வியாழன் அன்று நீதிமன்றம் பதில் அளிக்கும்.
10,000 கோடி உறுதி தொகை
ஜூன் 4ஆம் தேதி செபி, ராய் ஜாமீன் பெற ரூ.5,000 கோடி பணமாகவும், ரூ.5,000 வங்கி உறுதியும் அளிக்கும் படி உத்திரவிட்டது. ஆனால் அவரின் வங்கி கணக்கு, டெப்பாசிட், முதலீடு, பத்திரங்கள் அனைத்தையும் முடக்கியது குறிப்பிடதக்கது.
ஜாமீன்
ராய் தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் பெற நீதிமன்றத்திற்கு அளித்த மனுவில் செபி செலுத்திய தொகைக்கான விபரச் சீட்டு மற்றும் நிதி திரட்டியதிற்கான விபரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கிடைக்க ராய் தவம் கிடைப்பது வியாழக்கிழமையாவது பழிக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரச்சனை இங்கே இருக்கு
சுபத்ரா ராய் அவர்களின் சொத்து விபரங்களை நீதிமன்றத்திற்கு அளித்தில் 9 நிலங்கள் உள்ளது, அவைகளை விற்றால் சபத்ரா ராய் கண்டிப்பாக மீதமுள்ள தொகையை செலுத்து முடியும் எனவும் செபி நீதிமன்றத்திற்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
வங்கி உறுதி
ரூ.5,000 கோடிக்கான வங்கி உறுதியை சகாரா நிறுவனத்தின் 3 வெளிநாட்டு ஹோட்டல்களின் பங்கு உரிமத்தை சமர்பித்துள்ளது. மேலும் இதற்கான மதிப்பீட்டுச் சான்றிதல் பாங்க் ஆஃப் சீனாவில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.
மார்ச் 4
சுபத்ரா ராய் இந்த ரூ.26,000 மோசடி வழக்கிற்காக மார்ச் 4ஆம் தேதியில் இருந்து திகார் ஜெயிலில் இருக்கிறார்.