மும்பை: மத்திய நிதியமைச்சரான அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் நாளான இன்று மும்பை பங்கு சந்தையில் வர்த்தக துவக்கத்திலேயை சரிவை சந்தித்தது.
சற்றும் எதிர்பாராத நிலையில் மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி வர்த்தகம் துவங்கி ஒரு மணிநேரத்திலேயே சரிவை தழுவியுள்ளது. அந்த நிகழ்வு மத்திய பட்ஜெட்டின் முகத்திரை கிழிந்தது போலவே அமைந்தது.
மேலும் அவர் உரையாற்றும் போது களைப்பின் காரணமாக இருக்கையில் அமர்ந்து உரையாற்றினார், இந்த தருணத்தில் தான் பங்கு சந்தை 300 புள்ளிகள் சரிந்தது. பின்பு மதியம் 1 மணியளவில் சந்தை மீண்டும் உச்சம் பெற்றும் 25,662 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது. இன்று பங்கு சந்தை பல ஏற்ற இறக்கங்களை சந்தித்ததுள்ளது.
பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதலே சரிவுடனே துவங்கியது. நேற்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை 25,444.81 புள்ளிகளிள் முடிவடைந்தது இன்று காலை 25410 புள்ளிகள் சரிவடைந்தது. இதனால் சந்தை முதலீட்டாளர்களின் வர்த்தகம் குறைந்துள்ளது.
நிப்டி
மும்பை பங்கு சந்தை போல் நிப்டியிலும் இன்று காலை வர்த்தகத்தில் சுமார் 20 புள்ளிகள் சரிந்தது. சில நிமிடங்களுக்கு முன்புதான் சந்தை மீட்சியடைந்துள்ளது.
5 நிமிட இடைவேளை
பட்ஜெட் தாக்கலின் போது நிதியமைச்சரின் களைப்பின் காரணமாகவோ அல்லது அவை கூச்சலின் காரணமாகவோ 5 நிமிட இடைவேளையை சபாநாயகர் அறிவித்தார். இந்த இடைவோளையில் மட்டும் சுமார் 300 புள்ளிகள் குறைந்தது.
சரிவில் தத்தளிக்கும் பெரு நிறுவனங்கள்
டிசிஎஸ், சிப்லா, பார்தி ஏர்டெல், ஆக்சிஸ் வங்கி, எஸ்பிஐ, ஐசிஐசிஐ வங்கி போன்ற சந்தையின் பெரும் புள்ளிகளாக திகழும் நிறுவனங்களும் தலா 1 சதவீதம் சரிவை சந்தித்து வருகிறது.
தப்பித்த நிறுவனங்கள்
இந்தி இக்கட்டான சூழ்நிலையில் எச்.டி.எஃப்.சி, டாடா பவர், கோல் இந்தியா, என்டிபிசி, டாடா மோட்டார்ஸ், விப்ரோ ஆகிய நிறுவனங்கள் சரிவில் இருந்து மீண்டு வளர்ச்சியை சந்தித்துள்ளது.
More From GoodReturns

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ரிலையன்ஸ் முதல் ஜேகே டயர்ஸ் வரை..அடி வாங்கும் முக்கிய பங்குகள்! உங்க லிஸ்டில் ஏதும் இருக்கா?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications