டிசம்பர் மாதத்தில் நிஃப்டி 8000 புள்ளிகளை தொடும்!!

மும்பை: இந்திய பங்கு சந்தை வளர்ச்சி மற்றும் வர்த்தகத்தை சுட்டிக் காட்டி, சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த பங்கு வர்த்தக நிறுவனமான UBS வெளியிட்டுள்ள தகவல் படி, இந்திய அரசு பங்கு சந்தை புதிய உயரத்தை எட்டும் என்பதை ஒப்புக்கொள்ளாவிட்டாலும், டிசம்பர் மாதத்திற்குள் நிஃப்டி அளவு 8,000 புள்ளிகளைத் தொடும் என்று இந்நிறுவனத்தின் ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

'அடுத்த சில மாதங்களில் சந்தையின் வர்த்தக போக்கு பாஸிட்டிவ் ஆக முன்னேறிச் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலீட்டாளர்கள் வளாச்சி ஆராதரங்களுக்கு முன்னுரிமை கொடுக்க விரும்புவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம், குறிப்பாக பொருளாதார மீட்சியின் சுழற்சியின் தகவல் புள்ளிகள் வெளிப்படுத்தி வருகின்றன எனவும் 2014ஆம் ஆண்டின் முடிவில் நிஃப்டியின் இலக்கு 8000 ஆக இருக்கும், என UBS-ன் ஆய்வாளர் கௌதம் சாஹாவ்ச்சாரியா தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 மத்திய அரசு

மத்திய அரசு

மோடியின் அரசு ஏற்கனவே பல சீர்திருத்தங்களை தொடங்கியிருந்தாலும், 'அரசாங்கத்தின் செயலற்ற நிலைகள் தவறான கண்ணோட்டதில் இருப்பதால், இது நடைமுறைக்கு ஒவ்வாத எதிர்பார்ப்பாகவே உள்ளது.

திட்ட வளர்ச்சி

திட்ட வளர்ச்சி

முக்கிய துறைகளின் முன்னேற்றத்திற்காக ஒவ்வொன்றிலும் மோடியின் நிர்வாகம் ஏற்கனவே முக்கியமான செயல்பாடுகளை எடுத்திருந்தாலும், சந்தை அவற்றை இலட்சியம் செய்து வருகிறது. மோடி அரசின் திட்ட வளர்ச்சி திட்டங்கள் எதிர்பார்ப்புகள் அதிகமாகவே நிலைத்திருக்கின்றன என்றும், அவை விவாதத்திற்குரிய வகையில் நடைமுறைக்கு ஒவ்வாததாகவும் இருப்பதற்கு நிறுவனங்கள் கருத்து தெரிவிக்கிறது.

வளர்ச்சி திட்டங்களின் முக்கியதுவம்

வளர்ச்சி திட்டங்களின் முக்கியதுவம்

மோடியின் வளர்ச்சி திட்டங்களில் வர்த்தகம் செய்வதை எளிப்படுத்துதல், தொழிலாளர் சீர்திருத்தங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காடுகளுக்கான இ-கிளியரன்ஸ், தற்போதுள்ள சுரங்கங்களில் தானியங்கி உற்பத்தியை விரிவுபடுத்தும் உரிமங்கள், திட்டத்தை நடைமுறைப்படுத்தி, மேற்பார்வையிடுவதில் திட்டத்தை மேற்பார்வையிடும் குழுவினரின் அதிகாரத்தை விரிவுபடுத்துதல் ஆகியவற்றை முக்கியமான செயல்பாடுகளாக இந்த அரசு பட்டிலிட்டுள்ளது. இத்திட்டங்களின் படி நடந்தால் அடுத்த 3 மாதங்களில் பங்கு சந்தையும் சரி நாட்டின் உற்பத்தியும் சரி சிறப்பான வளர்ச்சியை எட்டும்.

அன்னிய முதலீடு

அன்னிய முதலீடு

இரயில்வே, காப்பீடு மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீடு செய்வதையும் மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அமைப்புகளை அறிமுகப்படுத்துவதையும் கூட பங்கு சந்தையில் பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என UBS நிறுவனம் தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+