மீண்டும் "சந்திரசேகரன்"!! டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாமராஜியத்தை கொண்டுள்ள டாடா குழுமத்தின் முதுகெலும்பாக விளக்குவது டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான (சீஇஓ) என்.சந்திரசேகரன் அவரின் 5 ஆண்டு பணிக்காலம் வரும் அக்டோபர் 6ஆம் தேதியுடன் முடிவடியும் நிலையில், அவரும் மீண்டும் 5 ஆண்டு காலம் பணி நீட்டிப்பு வளங்கியுள்ளது டாடா குழுமம்.

இதற்கான பரிந்துரையை டாடா குழுமம், நிறுவன பங்குதாரர்கள் என அனைத்து பிரிவுகளும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியாவில் பல தொழில் குடும்பங்கள் இருந்தாலும் டாடா குழுமம் போல் உலகளவில் பிரபலமான நிறுவனம் எதுவும் இல்லை என்று சொன்னால் மிகையாது. இக்குழுமத்தில் பல துறைகள் உள்ளது, அதில் குறைந்த வயதில் இருக்கும் சீஇஓ சந்திரசேகரன்(51). மேலும் இவர் ஒரு தமிழர். இவரை பற்றி நாம் அறிந்திராத சில விஷயங்களை இப்போது பார்போம்.

தமிழ்நாடும் சந்திரசேகரனும்..

தமிழ்நாடும் சந்திரசேகரனும்..

இந்தியாவின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனத்தை நடத்தி வரும் சந்திரசேகரன் ஒரு பக்கா தமிழர். பிறந்து வளர்ந்து அனைத்தும் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மோகனூரில் தான்.

படிப்பு

படிப்பு

இத்தகைய பெரும் நிறுவனத்தை நடத்தும் இவர் அமெரிக்காவிலோ, லண்டனிலோ படிக்கவில்லை... கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் இளங்கலை பட்டமும், திருச்சி ரீஜினல் இன்ஜினியரிங் கல்லூரியில் (NIT,trichy) முதுகலை பட்டம் பெற்றார்.

டாடா குழுமத்தில் சந்திரசேகரன்

டாடா குழுமத்தில் சந்திரசேகரன்

கடந்த அக்டோபர் 6, 2009ஆம் ஆண்டு டிசிஎஸ் நிறுவனத்தில் இவர் தலைமை செயல் அதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். அதற்கு முன் இதே நிறுவனத்தில் இவர் நிறுவன தலைவர் மற்றும் சீஓஓ-வாக இருந்தார்.

சம்பளம்

சம்பளம்

2013ஆம் ஆண்டின் டிசிஎஸ் நிறுவனத்தின் தகவல் படி இவரது சம்பளம் வருடத்திற்கு 11.6 கோடி ரூபாய்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+