டெல்லி: இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையின் சொத்து மதிப்பு அதிகப்படியான பண உள்ளிட்டால் ஆகஸ்ட் மாதம் 10.12 லட்சம் கோடி அதிகரித்து 6,300 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டத்து.

சொத்து மேலாண்மை துறையில் இந்தியாவின் 45 நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடந்த ஜூலை மாதம் 10,06,452 கோடி ரூபாயாக இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 10,12,824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சொத்து பாதுகாப்பு துறையில் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டியது இதுவே முதல் முறை எனவும் இக்கூட்டமைப்பு தெரவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தான்.
மேலும் மியூச்சவல் ஃபண்ட் மட்டும் அல்லாமல் மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி கடந்த மாதம் புது புது உயரங்களை தொட்டது. மேலும் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை 27,353 எட்டி இன்றும் புதிய உச்சத்தை தொட்டது. இதேபோல் நிஃப்டி 8173.90 புள்ளிகளை எட்டி முடிவடைந்துள்ளது.


Click it and Unblock the Notifications