மும்பை: இன்று மும்பை பங்குசந்தையில் வர்த்தக துவக்கம் முதலே 100 புள்ளிகள் சரிவுடன் துவங்கியது. இதனால் இன்றைய வர்த்தகம் முழுவதும் மந்தமான நிலையே நிலவியது. மேலும் மதியம் 2 மணி வரை சனிக்கிழமை வர்த்தக முடிவான 26260 புள்ளிகளை எட்டவே தடுமாறியது மும்பை பங்கு சந்தை.
அதேபோல் நிஃப்டியும் முந்தைய நாள் வர்த்தகத்தில் 50 புள்ளிகள் சரிவுடனே துவங்கி, வர்த்தக முடிவில் வெறும் 24.30 புள்ளிகள் உயர்ந்து முடிவடைந்தது.
மும்பை பங்குசந்தையில் இன்று ஜெட்ஏர்வேஸ், யூனிடெக், காக்ஸ்&கிங்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது
வர்த்தகர்கள் இன்று அதிகளவில் விற்கும் எண்ணத்துடன் செயல்பட்டது வர்த்தக சரிவிற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
இந்திய பங்குசந்தையை போலவே ஹாங்காங், அமெரிக்க டாவ் ஜோன்ஸ் சந்தைகள் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது.