மும்பை: நவம்பர் 28ஆம் தேதி முடிவடைந்த வாரத்தில் இந்திய சந்தையில் அன்னிய முதலீடு 1.432 பில்லியன் டாலர் அளவு அதிகரித்து அதன் மொத்த அளவீடு 316.11 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அதற்கு முந்தைய வாரம் வெறும் 672.4 மில்லியன் டாலர் மட்டுமே உயர்ந்தது குறிப்பிடதக்கது.
அன்னிய நாணய சொத்துக்கள்
மேலும் ஆர்பிஐ வெளியிட்ட அறிக்கையில் இக்காலகட்டத்தில் அன்னிய நாணய சொத்துக்கள் 1.424 பில்லியன் டாலர் அதிகரித்து 290.822 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. மேலும் இதில் அமெரிக்கா டாலர் மட்டும் அல்லாமல் யூரோ, பவுண்டு மற்றும் யென் ஆகியவையும் அடக்கம்
தங்க இருப்பு
ரிசர்வ் வங்கி தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதியில் உள்ள தளர்வுகளை நீக்கி புல்லியன் சந்தைக்கு உயிர் ஊட்டியது. ஆனால் ரிசர்வ் வங்கியின் தங்க இருப்பில் மாற்றம் இல்லை.