மும்பை: திங்கட்கிழமை வர்த்தக முடிவில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -0.39 சதவீதமாக குறைந்ததை அடுத்து மும்பை பங்குச்சந்தை உயர்வுடன் முடிவடைந்தது. இன்றைய வர்த்தகத்திலும் இதன் தாக்கம் தென்படுகிறது.
இன்று காலை வர்த்தக துவக்கத்தில் மும்பை பங்குச்சைந்தையில் சுமார் 150 புள்ளிகள் வரை உயர்ந்தது. இதன் பின் பல சரிவுகளை சந்தித்து நேற்றை சந்தை முடிவான 29,161 புள்ளிகளை அடைந்து மீண்டும் 40.95 புள்ளிகள் உயர்ந்தது.
பங்குச்சந்தை
இன்று 12.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை 40.95 புள்ளிகள் உயர்ந்து 29,135.88 புள்ளிகளை எட்டியது. நிஃப்டியில் வெறும் 3.85 புள்ளிகள் உயர்ந்து 8,809.35 புள்ளிகளை எட்டியது.
எஃப்எம்ஜிசி துறை உயர்வு
மேலும் இன்றைய வர்த்தகத்தில் பொதுத்துறை நிறுவன பங்குகள் 15.05 புள்ளிகள் உயர்வும், கட்டுமான துறை 1.21 புள்ளிகள் உயர்வும், ஆட்டோமொபைல் துறை 87.28 புள்ளிகள் உயர்வும், எஃப்எம்ஜிசி துறை பங்குகள் 150.12 புள்ளிகள் உயர்வும், ஐடித்துறை பங்குகள் 20.35 புள்ளிகள் உயர்வு சந்தித்துள்ளது.
வங்கித்துறை பங்குகள் சரிவு
ஆனால் வங்கித்துறை பங்குகள் 204.51 புள்ளிகள் சரிவுடன் உள்ளது. இதனால் சந்தையில் பட்டியலிட்டுள்ள அனைத்து நிறுவனங்களில் ஹெச்டிஎஃப்சி வங்கியை தவிர அனைத்து நிறுவனங்களுமே சரிவை தழுவியுள்ளது.
குட்ரிட்டன்ஸ்
இனி வணிகச் செய்திகளுக்காக தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள்+ போன்ற சமுக வளைதளங்கள் மூலம் இணைந்திடலாம்.


Click it and Unblock the Notifications