200 புள்ளிகள் சரிவுடன் மும்பை பங்குச்சந்தை!

மும்பை: வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று சில்லறை முதலீட்டாளர்கள் லாபத்தை எதிர்நோக்கி பங்கு இருப்பை குறைத்தால் சென்செக்ஸ் குறியீடு சரிந்தது.

பெடரல் ரிசர்வ் வங்கியின் முடிவுகள் இந்திய சந்தைக்கு சாதகமாக அமைந்ததால் வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான லாபத்தை எதிர்நோக்கி பங்கு இருப்பை குறைத்தனர். இதனால் மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு 200 புள்ளிகள் வரை சரிந்தது.

சென்செக்ஸ்

சென்செக்ஸ்

இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 205 புள்ளிகள் வரை சரிந்து 28,212 புள்ளிகளை அடைந்தது. வர்த்தக துவக்கத்தில் சில நொடிகளில் சந்தை உயர்வுடன் இருந்தாலும், இதன் பின் தொடர் சரிவை சந்தித்தது.

நிஃப்டி

நிஃப்டி

இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 70 புள்ளிகள் வரை சரிந்து 8,567.40 புள்ளிகளை எட்டியது.

லாபமைடைந்த நிறுவனங்கள்

லாபமைடைந்த நிறுவனங்கள்

வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டெக்னாலஜி நிறுவனங்கள் அனைத்தும் உயர்வை சந்தித்தது. குறிப்பாக விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் நிறுவனங்கள் 1 சதவீதத்திற்கும் அதிகமான அளவில் உயர்வை சந்தித்தது.

கோல் இந்தியா, ஹெச்டிஎஃப்சி, ஹெச்டிஎஃப்சி வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகளும் உயர்வை சந்தித்தது.

நஷ்டமடைந்த நிறுவனங்கள்

நஷ்டமடைந்த நிறுவனங்கள்

டாடா குழுமத்தின் அனைத்து நிறுவனங்களும் இன்றைய வர்த்தகத்தில் சரிவை சந்தித்தது குறிப்பிடதக்கது. இதனை தொடர்ந்து அரசு துறை நிறுவனங்களான ஒஎன்ஜிசி, பெல், கெயில், என்டிபிசி ஆகிய நிறுவனங்களும் சரிவை தழுவியது.

பார்தி ஏர்டெல்

பார்தி ஏர்டெல்

ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்கிய பார்தி ஏர்டெல் நிறுவனம் கடந்த வாரம் சிறப்பான வர்த்தகத்தை பெற்றது. ஆனால் திங்கட்கிழமை முதல் இந்நிறுவனம் குறைந்த அளவிலான வர்த்தகத்தை மட்டுமே பெற்றது குறிப்பிடதக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+