மும்பை: ஆசிய சந்தையில் நிலவும் மந்தமான வர்த்தகத்தின் காரணமாக இந்திய சந்தையில் வர்த்தக அளவு குறைந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, மும்பை பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க அளவு உயர்வு எதும் இல்லாமல் குறைவான வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு இன்று காலை வர்த்தகத்தில் 60 புள்ளிகள் வரை உயர்ந்தாலும் 9.45 மணியளவில், வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவை விட 10 புள்ளிகள் சரிவை சந்தித்தது.
இந்நிலையில் 11.30 மணியளவில் சந்தை வர்த்தகம் நிலைப்பெற்று 16.69 புள்ளிகள் உயர்ந்து 28,296.72 புள்ளிகள் வரை உயர்ந்தது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டி குறியீடும் மிகவும் சொற்ப அளவிவலான உயர்வை மட்டுமே சந்தித்துள்ளது. 11.30 மணியளவில் நிஃப்டி 2.50 புள்ளிகள் உயர்ந்து 8,573.40 புள்ளிகளை எட்டியது.
டெக்னாலஜி நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் சந்தையில் முக்கிய டெக்னாலஜி நிறுவனங்களான இன்போசிஸ், விப்ரோ, டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவு பாதையிலேயே உள்ளது.
பொதுத்துறை நிறுவனங்கள்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் பெல், கோல் இந்தியா, ஸ்டேட் பாங்க் இந்தியா, ஆகிய அரசுத்துறை நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்த நிலையில் என்டிபிசி, கெயில், ஒஎன்ஜிசி ஆகிய நிறுவனங்கள் உயர்வை சந்தித்தது.
ரிலையன்ஸ் மற்றும் டாடா
இந்தியாவின் முன்னணி பலதுறை நிறுவனங்களான ரிலையன்ஸ் மற்றும் டாடா நிறுவனங்கள் கடந்த ஒரு வார காலமாக சரிவை சந்தித்து வந்தது. இன்றைய வர்த்தகத்திலும் ரிலையன்ஸ், டாடா பவர், டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளது.