ஆட்டம் முடிய போகிறது.. கடையை மூட வேண்டியது தான்: சஹாரா புலம்பல்

மும்பை: ரூ.20,000 கோடி ஊழல் வழக்கில் சிக்கித் தவிக்கும் சஹாரா நிறுவனத்தின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தீர்ப்பை திங்கட்கிழமை உச்சநீதி மன்றம் வெளியிட உள்ளது.

இவ்வழக்கில் தொடர்புடைய 3 தலைவர்களுக்கு, ஜாமீன் பெற ரூ.10,000 கோடி நிதி உத்திரவாதம் அளிக்க உச்சநீதி மன்றம் கொடுத்த காலகெடு முடிவடைந்த நிலையில் இந்நிறுவன சொத்துக்களை ஏலம் விட சுப்ரீம் கோர்ட் முடிவு செய்துள்ளதாக பேச்சு நிலவுகிறது.

நிறுவன தரப்பில் கால நீட்டிப்புக்கான மனு அளிக்கப்பட்டுள்ளது.

கடைசி வாய்ப்பு

கடைசி வாய்ப்பு

இந்நிறுவன சொத்துக்களை விற்று கைதான முன்று தலைவர்களுக்கு ஜாமீன் பெற பல வாய்ப்புகள் கொடுக்கப்பட்டாலும், அனைத்திலும் தோல்வியை சந்தித்தது சஹாரா நிறுவனம்.

இந்நிலையில் கடந்த வாரம் சஹாரா நிறுவனத்தின் பார்மூலா ஒன் மோட்டார் ரேசிங் சொத்தை விற்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதற்கான பணிகளை செய்து வரும் நிலையில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

(கடைசி ஸ்லைடரை மறக்காமல் பார்க்கவும்...)

ஏலம்..

ஏலம்..

இம்முயற்சியில் சஹாரா நிறுவனம் தோல்வியுற்றால் நீதிமன்றம் இந்நிறுவனத்தின் நீயூயார்கில் உள்ள பிளாசா ஹோட்டல் உட்பட
இந்தியாவில் இருக்கும் அனைத்து சொத்துக்களையும் நீதிமன்றம் ஏலம் முறையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.

 

 

இக்கட்டான சூழ்நிலை

இக்கட்டான சூழ்நிலை

சஹாரா நிறுவனம் தற்போது இருக்கும் சூழ்நிலையில், சொத்துக்களை விற்றாலும் ஜாமீன் பெற தேவையான தொகையை திரட்ட முடியாது என ரியல் எஸ்டேட் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

சஹாரா நிறுவனம்

சஹாரா நிறுவனம்

இந்நிறுவனம் ரியல் எஸ்டேட், ஹோட்டல், கட்டுமானம் துறைகளில் மட்டும் அல்லாமல் மீடியா, சில்லறை வர்த்தகம், திரைப்படங்களுக்கு இன்சூரன்ஸ் மற்றும் எஃப் 1 ரேசிங் போன்ற துறைகளிலும் ஈடுப்பட்டு வருகிறது.

20,000 கோடி மோசடி வழக்கு

20,000 கோடி மோசடி வழக்கு

20,000 கோடி ரூபாய் மோசடிக்காக சஹாரா நிறுவனத்தின் நிறுவனரான சுப்ரதா ராய் மற்றும் இரு நிர்வாகிகளை மார்ச் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர்.

இதன் பின்னர் இவர்களுடனான விசரானையில் 20,000 கோடி ரூபாயை இன்னும் 18 மாதங்களில் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபியிடம் ஒப்படைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

 

 

முவர்

முவர்

முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 20,000 ரூபாய் மோசடியில் சஹாரா நிறுவனத்தின் முக்கிய தலைவர்களாக சுப்ரதா ராய், ரவி சங்கர் துபே மற்றும் அசோக் ராய் சவுத்ரி ஆகிய முவரும் முக்கிய குற்றவாளியாக கருதப்படுகின்றனர்.

10,000 நிதி உத்தரவாதம்

10,000 நிதி உத்தரவாதம்

சுப்ரதா ராய் அவர்களுக்கு பெயில் பெற, சகாரா நிறுவனம் 5,000 கோடி செபியிடம் டெபாசிட் செய்யவும், மேலும் ஒரு வங்கி 5,000 கோடி வரையிலான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கோர்ட் சுப்ரதா ராய்-க்கு செக் வைத்தது குறிப்பிடதக்கது.

ஃபை ஸ்டார் ஜெயில்

ஃபை ஸ்டார் ஜெயில்

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+