செபி உத்தரவு எதிரொலி: பெண் தலைவர்களை நியமிப்பதில் இந்திய நிறுவனங்கள் மும்முரம்!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: செபியின் புதிய உத்தரவு காரணமாக இந்திய நிறுவனங்கள் அனைத்தும் நிர்வாக குழுவில் பெண் தலைவர்களை நியமிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள நிறுவனங்கள் அனைத்தும் ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் உயர் மட்ட குழுவில் பெண் தலைவர் ஒருவரை நியமிக்க வேண்டும் என சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி ஆணையிட்டது.

செவ்வாய்க்கிழமை ஒரு நாளில் மட்டும் டாடா, பஜாஜ் குழுமங்கள் போன்ற 50 நிறுவனங்கள் பெண் தலைவர்களை நியமனம் செய்துள்ளதாக செபி தெரிவித்துள்ளது.

யு.கே.சின்ஹா

யு.கே.சின்ஹா

கடந்த வெள்ளிக்கிழமை சந்தையில் பட்டியலிட்டுள்ள 9,000 நிறுவனங்கள், நிர்வாக குழுக்களில் ஒரு பெண் தலைவரையாவது நியமித்துவிட வேண்டும் என போராடி வருகின்றன. இது மிகவும் வேதனை அளிக்கக்கூடிய விஷயம் என செபி அமைப்பின் தலைவர் யு.கே.சின்ஹா தெரிவித்தார்.

பெண் தலைவர்

பெண் தலைவர்

நியமனத்திற்கான கடைசி நாள் நெருங்கியுள்ள நிலையில் செவ்வாய்க்கிழமை மட்டும் நாட்டின் முக்கிய நிறுவனங்களில் டாடா இண்டர்நேஷ்னல், பஜாஜ் ஆட்டோ போன்ற 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பெண் தலைவர்களை நியமனம் செய்ததுள்ளதாக பங்குச்சந்தை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

கடுமையான நடவடிக்கை

கடுமையான நடவடிக்கை

ஏப்ரல் 1ஆம் தேதிக்குள் நியமன பணிகள் முடிக்கவில்லை என்றால் நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என செபி மற்றும் பங்குச் சந்தை நிர்வாகம் இந்திய நிறுவனங்கள் எச்சரித்திள்ளது.

டாடா இண்டர்நேஷ்னல்

டாடா இண்டர்நேஷ்னல்

செபியின் ஆணையை ஏற்று டாடா இண்டர்நேஷ்னல் நிறுவனம் தனது நிர்வாக குழுவில் நிர்வாக அதிகாரம் இல்லாத தனி இயக்குனராக வேதிகா பந்தன்கரை நியமித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ

பஜாஜ் ஆட்டோ நிர்வாக குழுவில் இருந்து சுமன் கிர்லோஸ்கர் மார்ச் 31ஆம் தேதியன்று பதவி விலகுவதால், இப்பணியிடத்தில் கீதா பிரமல் நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல் ஸ்ரீராம் ஈபிசி நிறுவனத்தில் சந்திரா ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Firms rush to appoint women directors

Within days of the Securities and Exchange Board of India’s barb, listed companies have begun running from pillar to post to appoint women directors on their respective boards with at least 50 such appointments being made on Tuesday itself.
Story first published: Wednesday, March 25, 2015, 11:12 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X