சென்னை: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பிரச்சனைகள் காரணமாக பங்குச்சந்தையில் செய்யப்பட்டு இருந்த முதலீடுகள் அனைத்தும் தங்கம் மற்றும் வெள்ளி மீது மாற்றப்பட்டு வருகிறது. இதனால் தங்கம் மற்றும் வெள்ளி மீதான வர்த்தகம் அதிகரித்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஸ்திரமான வர்த்தகம் நடைபெற்று வருவதால் தங்கம் மீதான முதலீட்டுக்கு சாதகமான நிலை உருவாகியுள்ளது.
தங்கம் விலை
இன்றைய நாணய சந்தை வர்த்தகத்தில் 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 150 ரூபாய் வரை உயர்ந்து 27,100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெள்ளியின் விலை
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான இன்று வெள்ளி மீதான வர்த்தகம் அதிகளவில் இருந்தாலும், இதன் விலை 200 ரூபாய் குறைந்து 38,550 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
டாலர்
அமெரிக்க டாலருக்கும் எதிரான இந்தியா ரூபாயின் மதிப்பு 62.45 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலையும் சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளது.
பங்குச்சந்தை
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று பல ஏற்றஇறக்கங்களை சந்தித்தது. இதன் முடிவில் வெறும் 1.03 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 27,458.64 புள்ளிகளை அடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 0.75 புள்ளிகள் சரிந்து 8,341.40 புள்ளிகளை அடைந்தது.