பெங்களுரூ: இந்தியாவில் 25 தேசிய வங்கிகள் மோசடியாளர்களின் மூலம் 12,620 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசு வங்கி ஊழியர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நிறுவனங்கள் அல்லது தனிநபர்களுடன் இணைந்து இத்தகைய மோசடிகளில் ஈடுப்படுவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
12,620 கோடி ரூபாய்
கடந்த 4 வருட காலத்தில் 25 வங்கிகள் மோசடியாளர்களுக்கு கடன் அளித்ததன் மூலம் சுமார் 12,260 கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது.
குறிப்பாக கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 5 வங்கிகள் 2,060.75 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடிகளைச் சந்தித்துள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கர்நாடகா வங்கிகள்
கனரா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, சிண்டிகேட் வங்கி மற்றும் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூர் ஆகிய வங்கிகள் கர்நாடகாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுபவை.
வழக்குகள்
இத்தகைய மோசடிகளுக்கு எதிராக வங்கி நிர்வாகம் சுமார் 4,845 வழக்குகள் பதிவு செய்துள்ளது. இவ்வழக்குகளில் வங்கி ஊழியர்களுக்கு மறைமுகமான தொடர்பு இருக்கலாம் என நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
தொலைத் தொடர்பு நிறுவனம்
புதன்கிழமை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, விஜயா பாங்க் மற்றும் கனரா வங்கி ஆகியவை இணைந்து அகமதாபாத் நகரைச் சேர்ந்த தொலைத் தொடர்பு நிறுவனத்தின் மீது 126.4 கோடி ரூபாய் மதிப்பிலான மோசடி வழக்கு பதிவு செய்துள்ளது.
நிதியமைச்சகம்
இத்தகைய மோசடிகளைத் தடுக்க நிதியமைச்சகம் தனிக் குழு அமைக்கத் திட்டமிட்டுள்ளது. தனியார் வங்கிகளோடு ஒப்பிடுகையில் தேசிய வங்கிகளில்தான் அதிக அளவில் மோசடிகள் நடப்பதாகவும் நிதியமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications