மும்பை: சர்வதேச சந்தைகளில் நிலவும் மந்த நிலை மற்றும் டாலர் மதிப்பு உயர்வால் மும்பை பங்குச்சந்தையின்சென்செக்ஸ் குறியீடு இன்று 555 புள்ளிகள் வரை சரிந்து 27,886 புள்ளிகளை எட்டியுள்ளது.
இதனால் சந்தை முதலீட்டாளர்கள் டிபென்ஸிவ் ஸ்டாக்ஸ் எனப்படும் அதிக ஈவுத்தொகை அளிக்கும் நிறுவனங்களிலும்,சிறந்த வர்த்தக வரலாற்றைக் கொண்ட நிறுவனங்களிலும் முதலீடு செய்தனர்.
1,200 புள்ளிகள் சரிவு
மும்பை பங்குச்சந்தையின் அளித்துள்ள தகவலின் படி கடந்த 4 நாள் வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 1,200 புள்ளிகள் வரைசரிவை சந்தித்துள்ளது.
சென்செக்ஸ்
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே சரிவு பாதையில் சென்ற சென்செக்ஸ், மாலை நேரத்தில் அதிகளவிலானவீழ்ச்சியைச் சந்தித்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு 555.89 புள்ளிகள் சரிந்து 27,886.21 புள்ளிகளை அடைந்துள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 157.90 புள்ளிகள் சரிந்து 8,448.10 புள்ளிகளை அடைந்துள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் லாபமடைந்த நிறுவனங்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், சந்தையின் முக்கியமான இரு நிறுவனங்கள் லாபமடைந்துள்ளது, இதில் சன் பார்மா மற்றும் ஐசிஐசிஐ வங்கி அடக்கம்.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ரிலையன்ஸ், ஹிரோமோட்டோ கார்ப், சிப்லா, மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஐடிசி,ஹெச்டிஎஃப்சி, ஒஎன்ஜிசி போன்ற சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

ஆசிய பங்குச்சந்தைகளில் பெரிய வீழ்ச்சி!! தென்கொரிய பங்குச்சந்தையில் வர்த்தகமே நிறுத்தம்!!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?



Click it and Unblock the Notifications