மும்பை: இந்திய வங்கிகளில் கடன் மோசடி, நிதி மோசடி போன்றவை அதிகரித்துள்ளதால் ரிசர்வ் வங்கி, இந்திய வங்கி அமைப்பில் புதிய வடிவமைப்பை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் ஒரு வங்கியில் ஒருவர் தப்புத் தண்டா பண்ணினா வேறு எந்த வங்கியிலும் அவர் வங்கிச் சேவை பெற முடியாது.
அவரது கணக்கின் தகவல்கள் பிற வங்கிகளுக்குத் தெரியும் வகையிலும், ஆபத்து கணக்காளர் ( red flagging of accounts) என்ற அடையாளத்தை வணிக வங்கி நிர்வாகம் அளித்துவிடும், இதன் பின் அவர் வேறு எந்த வங்கியிலும் கடன், டெப்பாசிட், முதலீடு போன்ற எந்த வங்கிச் சேவையும் பெற முடியாது.
ரிசர்வ் வங்கி
இந்திய வங்கி அமைப்பில் இருக்கும் வணிக வங்கியின் கணக்காளர்கள் விபரங்களை ஒருங்கிணைத்து, மோசடி செய்தவர்களின் கணக்கை ஆபத்துக் கணக்குகளாக அறிவித்த பின் அதை மோசடி மையப்பதிவகம் என்கிற Central Fraud Registry-யில் இணைக்கப்படும்.
மோசடி மையப்பதிவகத்தை இந்தியாவில் உள்ள அனைத்து தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிளும் பயன்படுத்து வகையில் ரிசர்வ் வங்கி வடிவமைத்துள்ளது.
சிபிஐ
இந்த மோசடி மையப்பதிவகம் வங்கிகள் மட்டும் அல்லாமல் சிபிஐ மற்றும் சென்டரல் எக்னாமிக் இண்டலிஜென்ஸ் பிரோ என்கிற CEIB அமைப்பு இயக்க ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.
இதன் மூலம் புதிய மோசடிகளைத் தடுக்கும் திட்டங்களை வங்கி அமைப்பில் விரைவாகச் செயல்படுத்த முடியும்.
ஆபத்துக் கணக்கு
தற்போது வங்கி அமைப்பில் மோசடி கணக்காளர்களின் வங்கி கணக்கை ஆபத்து கணக்காக அறிவிக்கும் புதிய முயற்சியை அறிமுகம் செய்துள்ளது ரிசர்வ் வங்கி.
ஆபத்து கணக்குகளாக அறிவிக்கும் பட்சத்தில் வங்கித்துறையில் உள்ள ஆபத்துக்கள் குறையும்.
வராக் கடன்
இப்புதிய திட்டங்கள் மூலம் அடுத்தச் சில வருடங்களில் வராக் கடன் அளவு அதிகளவில் குறையும் என ரிச்ர்வ் வங்கி நம்புகிறது.
நாணயமற்றவர்
இதில் வங்கிகளின் கடன் பெற்று மோசடி செய்ய நிறுவனங்கள், நிறுவனத் தலைவர் ஆகியோரும் இணைப்படுவர்கள், மேலும் நாணயமற்றவர்களாக அறிவிக்கப்பட்டவர்களும் மோசடி மையப்பதிவகத்தில் இணைக்கப்படுவர்.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!



Click it and Unblock the Notifications