மும்பை: அன்னிய போர்ட்போலியோ முதலீட்டாளர்கள் மீது விதிக்கப்பட்ட வரி வதிப்பின் மீது மத்திய அரசு ஆய்வுசெய்வதாக அறிவித்த நிலையில், இன்று மும்பை பங்குச் சந்தையில் முதலீடு குவிந்த வண்ணம் உள்ளது.
மேலும் ஆசிய சந்தையும் இன்றைய வர்த்தகத்திற்கு வலிமை சேர்ந்துள்ளது.
இன்றைய வர்த்தகத் துவக்கம் முதலே உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் 420 புள்ளிகள் வரை உயர்ந்தது. ஆரம்பக்கட்டவர்த்தகத்தில் சில புள்ளிகள் சரிந்தாலும், பின் தொடர் உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் படி மதியம் 12 மணியளவில் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 389.71 புள்ளிகள் உயர்ந்து 26,988.82புள்ளிகளை எட்டியுள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் 122.20 புள்ளிகள் உயர்ந்து 8,179.50 புள்ளிகளை எட்டியுள்ளது.
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.