மும்பை: இந்திய பங்குச்சந்தையில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு குறைப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகள் கடந்த 2 நாட்களாக அதிகளவில் சரிவை சந்தித்து வருகிறது.
அன்னிய முதலீட்டாளர்களின் மாட் வரிப் பிரச்சனையில் மத்திய அரசு ஆலோசனை செய்வதாக அறிவித்த பின் வெள்ளிக்கிழமை சந்தையில் இயல்பு நிலை திரும்பியுள்ளது.
சென்செக்ஸ்
இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே சென்செக்ஸ் உயர்வுடன் காணப்பட்டது. வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் சந்தையில் முதலீடு அதிகரித்ததால், சென்செக்ஸ் புதன்கிழமை இழந்த 745 புள்ளிகளை இன்று ஈடு செய்யும் நிலைக்குத் திரும்பியுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு 506 புள்ளிகள் உயர்ந்து 27,105.39 புள்ளிகளை எட்டியுள்ளது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று 134.20 புள்ளிகள் வரை உயர்ந்து 8,191.50 புள்ளிகளை எட்டியுள்ளது.
முதலீடு குறைப்பு
கடந்த 15 வர்த்தக நாட்களில் இந்திய சந்தையில் இருந்து சுமார் 1,361 கோடி ரூபாய் அளவிலான பண இருப்பு குறைந்துள்ளது. அதேபோல் 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகள் விற்கப்பட்டுள்ளது.
ரூபாய் மதிப்பு
நாணய சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 பைசா உயர்ந்து 63.91 ரூபாயை எட்டியுள்ளது. இதன் மூலம் ரூபாய் மதிப்பு 20 மாத சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கச்சா எண்ணெய் விலை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை 3 சதவீத சரிந்துள்ளதால், உள்ளாட்டுச் சந்தையில் வர்த்தகம் சூடுப்பிடித்துள்ளது.
தமிழ் குட்ரிட்டன்ஸ்
இனி தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தை சமுக வலைதளங்கள் மூலம் இணைந்திடலாம். பேஸ்புக், டிவிட்டர் மற்றும் கூகிள் பிள்ஸ்.