மும்பை: செவ்வாய்க்கிழமை வர்த்தகத் துவக்கும் முதலே மும்பை பங்குச் சந்தை சரிவடையத் துவங்கியது இதன் மூலம்சென்செக்ஸ் குறியீடு சுமார் 500 புள்ளிகள் வரை சரிவடைந்துள்ளது.
மத்திய அரசு இன்று ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் மற்றும் மார்ச் மாதத்திற்கான தொழிற்துறை உற்பத்தி தகவல்களை வெளியிட உள்ள நிலையில் முதலீட்டாளர்கள் சந்தையின் முக்கிய நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்றுவருகின்றனர்.
இதன் எதிரொலியாகச் சென்செக்ஸ் குறியீடு 460 புள்ளிகள் சரிந்து 27,015 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டியும் 150 புள்ளிகள் வரை சரிந்து 8,174.90 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
இந்திய சந்தைக்கு ஏற்றார் போல் சர்வதேச சந்தையிலும் மந்த நிலை நிலவுகிறது. குறிப்பாகக் ஐரோப்பா, தனதுபொருளாதாரத்தை மேம்படுத்த கிரீஸ் நாட்டுடன் நடத்தப்பட்டு வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்காணப்படாததால் இந்திய சந்தையில் முதலீட்டு அளவு பாதித்துள்ளது.
அதேபோல் ஜப்பான், தென் கொரியா ஆகிய சந்தைகள் செவ்வாய்க்கிழமை சந்தையில் 0.1 சதவீத சரிவை சந்தித்துள்ளது.