மும்பை: 2015ஆம் ஆண்டு இறுதிக்குள் கண்டிப்பாக அரசு பத்திரங்கள் மீதான வட்டி வகிதத்தை உயர்த்தப்படும் என அமெரிக்கப் பெடரல் ரிசர்வ் வங்கியின் தலைவரான ஜேனட் யெலன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்திய சந்தையின் திங்கட்கிழமை வர்த்தகத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
பங்குச் சந்தை
கடந்த வாரம் சென்செக்ஸ் குறியீடு தட்டுத்தடுமாறி 28,000 புள்ளிகளை எட்டி நிலையில், இன்று ஒரு நாள் வர்த்தகத்தில் மட்டும் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று சென்செக்ஸ் குறியீடு, காலை வர்த்தகம் துவக்கும் முதலே சரிவை தழுவியது. இதன் மூலம் 1.30 மணியளவில் சென்செக்ஸ் 305 புள்ளிகள் சரிந்து 27,652.23புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
இன்றைய வர்த்தகத்தில் நிஃப்டி குறியீடு 80.40 புள்ளிகள் சரிந்து 8,378.55 புள்ளிகளை அடைந்தது.
சர்வதேச சந்தை
திங்கட்கிழமை வர்த்தகத்தில் ஹாங்காங், சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் உயர்வைச் சந்தித்துள்ள நிலையில், இந்திய சந்தை மட்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
டாலர் மதிப்பு
நாணயச் சந்தையில் இன்று அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.10 பைசா குறைந்து 63.62 ரூபாயாக உள்ளது.