மும்பை: நாட்டின் நிலவும் பருவநிலை மாற்றத்தால் இந்தியாவில் உணவு பொருட்கள் உற்பத்தி அதிகளவில் பாதித்துள்ளது. இதனால் இந்தியா சந்தையில் இன்று முதலீடு அதிகளவில் குறைந்தது.
அதுமட்டும் அல்லாமல் கிரீஸ் நாட்டில் நிலவும் பொருளாதாரப் பிரச்சனைகளால் இந்திய சந்தையில் ஐரோப்பிய நாடுகளின் மூதலீடு அதிகளவில் குறைந்தது.
மேலும் ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை வெளியீடுகளால் வங்கித்துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இன்று சரிவை தழுவியது.
இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் குறியீடு சுமார் 688.54 புள்ளிகள் வரை சரிந்து 27,160.45 புள்ளிகளை எட்டியது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் மிகப்பெரிய அளவிலான சரிவைச் சந்தித்தது. இதனால் நிஃப்டி குறியீடு 196.95 புள்ளிகள் சரிந்து 8,236.45 புள்ளிகளை அடைந்தது.