மும்பை: ரிசர்வ் வங்கியின் வட்டிக் குறைப்பு மற்றும் பருவ நிலை மாற்றம் இந்திய சந்தையை இன்றும் கடுமையாகப் பாதித்ததுள்ளது. இதனால் மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீடு இன்று 450 புள்ளிகள் வரை சரிந்து 27,000 புள்ளிகளுக்குக் குறைவாகச் சரிந்தது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 660 புள்ளிகள் சர்ந்து சந்தை முதலீட்டாளர்களைக் கடுமையாகப் பாதித்தது.
மும்பை பங்குச் சந்தை..
புதன்கிழமை வர்த்தகத் துவக்கத்திலேயே வர்த்தகம் சரிவைடை துவங்கியது. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் தங்களது முதலீட்டை படிப்படியாகக் குறைத்து வந்தனர்.
சென்செக்ஸ்
மதிய நேர வர்த்தகத்தில் சுமார் 12 மணியளவில் சென்செக்ஸ் சுமார் 450 புள்ளிகள் வரை சரிந்தது சந்தையைப் பதம் பார்த்தது. அதன் பின் சில புள்ளிகள் உயர்ந்தாலும், சரிவு பாதையிலேயே சென்செக்ஸ் இருந்தது.
வர்த்தக முடிவு
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 351 புள்ளிகள் சரிந்து 26,837 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டியும் இன்று சரிவு பாதையிலேயே உருண்டு ஒடியது. இதன்படி இன்றைய வர்த்தக முடிவில் நிஃப்டி குறியீடு 101.35 புள்ளிகள் சரிந்து 8,135 புள்ளிகளை அடைந்தது.
உலகச் சந்தை
புதன்கிழமை வர்த்தகத்தில் ஜப்பான் மற்றும் சீனா சரிவைச் சந்தித்தது. இதனால் சீனா, ஹாங்காங் மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் முதலீடு அதிகளவில் குறைந்தது.
ரூபாய் மதிப்பு
இந்திய சந்தையில் இன்று முதலீடு குறைந்ததால் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.14 பைசா குறைந்து 63.96 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.