மும்பை: வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கத்துடன் பங்குகளை அதிகளவில் விற்றதால், சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கி, 245 புள்ளிகள் சரிவுடன் முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், வங்கி, நுகர்வோர் துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் அதிகளவில் விற்கப்பட்டன.
சென்செக்ஸ்
திங்கட்கிழமை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீடு உயர்வுடன் துவங்கினாலும், 245 புள்ளிகள் சரிந்து 26,523.09 புள்ளிகளை அடைந்தது. இதனால் சந்தையின் முக்கிய நிறுவனங்கள் அனைத்தும் சரிவை சந்தித்து.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று 70 புள்ளிகள் வரை சரிந்த 8,044 புள்ளிகளை எட்டியுள்ளது.
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 38 பைசா சரிந்து 64.14 ரூபாயாகக் குறைந்தது.
லாபம் பெற்ற பங்குகள்
திங்கட்கிழமை நிகழ்ந்த மந்தமான வர்த்தகத்தில் சந்தையின் டாப் 30 நிறுவனங்களில் டாடா பவர், பஜாஜ் ஆட்டோ, ஆக்சிஸ் வங்கி, டிசிஎஸ் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே லாபத்தைச் சந்தித்துள்ளது.